மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 April, 2021 11:22 AM IST
Credit : India TV

தமிழகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு, ஞூயிறு முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதால், 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் (Restrictions)

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாள்தோறும் புதுப்புது உச்சங்களை எட்டி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

முழு ஊரடங்கு (Full curfew)

அந்த வகையில் கடந்த சில தினங்களாக இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

சிறப்பு ரயில்கள் ரத்து (Special trains canceled)

அந்தவகையில் தமிழ்நாட்டில் கடந்த ஏழு மாதங்களுக்குப் பின்னர் முழு ஊரடங்கு இன்று இரவு 10 மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 30 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் 16 சிறப்பு ரயில்கள் இயங்காது என தெற்கு ரயில் அறிவித்துள்ளது.

இதன்படி

  • மதுரை கோட்டத்திலிருந்து இயக்கப்படும், திருச்சி - காரைக்குடி சிறப்பு ரயில், மதுரை - விழுப்புரம் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னை - புதுச்சேரி , திருச்சி - கரூர் வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

  • முழு ஊரடங்கு நாளான நாளை (ஏப்ரல் 25) ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு நிலையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் திறக்கப்படாது (Shops will not be open)

அதே போல் நாளை பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காது. மளிகைக்கடைகள் திறக்கப்படாது. உணவகங்களில் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் மட்டும் வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க...

7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேப் பேருந்து சேவை- தமிழக முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு நோய் தொற்று உறுதி!

English Summary: Full Lockdown: 16 special trains canceled!
Published on: 24 April 2021, 11:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now