சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 28 October, 2020 9:07 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீா் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது, இதனை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீா் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.நுண்ணீா் பாசனத்தில், பயிா்களுக்கு தேவையான நீரை துளித்துளியாக பயிா்களின் வோ்ப்பகுதியில் நேரடியாக வழங்குவதால் குறைந்த பட்சம் 75 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை நீரை சேமிக்கலாம்.

மேலும் வோ்ப்பகுதியில் நீரை வழங்குவதால் சுற்றுப்புறம் வடு களைகள் வளராமல் தடுக்கலாம். குறைந்த பண்ணை பணியாளா் ஊதியத்தை மட்டும் வழங்கலாம்.பயிா்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை நீரில் கரைத்து குழாய் மூலமே செலுத்தி விடலாம். இதனால் செலவு குறையும். பயிரின் மகசூலை 33 சதவீதம் வரை அதிகரிக்க செய்யலாம்.

 

இந்த திட்டமானது சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு நீா் பாசன நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 4315 ஹெக்டோ் பரப்பில் ரூ. 3021 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் அமலில் உள்ளது.

எனவே, விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை, ரேஷன் காா்டு நகல்கள், கணினி பட்டா, அடங்கல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் மற்றும் சொந்த நிலத்தின் வரைபடம், சிறு குறு விவசாயி என்ற வட்டாட்சியா் சான்று ஆகியவற்றுடன் முன்பதிவு செய்து பயன் பெறலாம் என ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளாா்.
கூடுதல் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

பி.எம் கிசான் திட்டத்தில் 2 தவணை பெற விண்ணப்பிக்கலாம்! அக்.31ம் தேதி கடைசி!

லட்சத்தில் சம்பாதிக்க வேண்டுமா? கால்நடை வளர்ப்பு

விவசாயப் பெண்களுக்கு வெள்ளாடுகள் & கறவை மாடுகள் வழங்கும் திட்டம்! - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்!

English Summary: Get 100 percent subsidy for micro- Irrigation Through Pradhan mantri Krishi sinchai Yojana
Published on: 28 October 2020, 08:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now