News

Thursday, 03 December 2020 12:06 PM , by: Daisy Rose Mary

அடுத்த இரண்டு மாதங்களில் 3.50 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக் கோழி வழங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு முன் உதாரணமான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் பொது மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை செயல்படுத்துவதில் துறை ரீதியாக போட்டி போட்டுக் கொண்டு அமைச்சர்கள் செயல்படுத்தி வருகின்றனர் என்றார்.

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் கட்டுமானப் பணி 75 சதம் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் பல்லடத்தில் தான் அதிகம் உள்ளன என்றார். புணேவிற்கு அடுத்தபடியாக பல்லடத்தில் ரூ.13 கோடி மதிப்பில் கோழியின ஆராய்ச்சி மற்றும் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், அடுத்த இரண்டு மாதங்களில் 3.50 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு மற்றும் நாட்டுக் கோழி வழங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்

மேலும் படிக்க...

லட்சத்தில் சம்பாதிக்க வேண்டுமா? கால்நடை வளர்ப்பு தொழில்களை தேர்ந்தெடுங்கள்.. அரசு மானியத்துடன் சிறப்பான எதிர்காலம்!

சிறு சிறு வேளாண் தொழில் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் வாங்க..!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)