மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 July, 2020 4:26 PM IST
Credit : CompareRemit

நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின், நான்காம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு, துவங்கியுள்ளது. இதில் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு, 4,852 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், பாதுகாப்பான முதலீட்டுக்கு ஒரு வாய்ப்பாக, அரசின் இந்த தங்க பத்திர வெளியீடப்பட்டுள்ளது. 

இது குறித்த மேலும் சில முக்கியமான விபரங்கள்

  • அரசின், நான்காம் கட்ட தங்க பத்திர வெளியீடு, வரும், 10ம் தேதியுடன் முடிவடைகிறது.

  • இந்த நான்காம் கட்ட வெளியீட்டில், தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு, 4,852 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • பத்திர வெளியீட்டு அறிவிப்புக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு, வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

  • வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, ஒரு கிராமுக்கு, 50 ரூபாய் வீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், 'கிரெடிட், டெபிட்' கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க பத்திரங்களை வாங்குவோருக்கு, ஒரு கிராம், 4,802 ரூபாய்க்கு கிடைக்கும்.

  • இந்த தங்க பத்திரங்கள், வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும்.

  • மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம், ஒரு 'யூனிட்' என்ற கணக்கில் வழங்கப்படும்.

  • நடப்பு நிதியாண்டில், இந்த தங்க பத்திரங்கள், ஆறு கட்டங்களாக, ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட உள்ளது.

  • பொதுவாக, உள்நாட்டில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும்போது, அரசு இந்த தங்க பத்திர வெளியீட்டை மேற்கொள்ளும். கடந்த, 1ம் தேதி, முன்பேர சந்தையில், 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை, 48 ஆயிரத்து, 982 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

  • தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு, ஆண்டு வட்டி விகிதம், 2.50 சதவீதமாக வழங்கப்படுகிறது. இந்த வட்டி வருமானம், முதலீட்டாளரின் வருமானத்தில் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ப வரி விதிக்கப்படும்.

  • தங்க பத்திரங்களின் முதிர்வு காலம், எட்டு ஆண்டுகள் ஆகும். இருப்பினும், முதலீட்டாளர்கள் ஐந்தாம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற விரும்பினால் வெளியேறலாம்.

  • இந்த தங்க பத்திர முதலீட்டில், முதிர்ச்சியின்போது , மூலதன ஆதாய வரி விதிக்கப்படாது என்பது, வேறு எதிலும் இல்லாத தனிப்பட்ட சிறப்பாகும்.

மேலும் படிக்க...

PM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம்!

கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!

English Summary: Gold bond issued by Union Government for Current Bond
Published on: 08 July 2020, 07:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now