மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 August, 2020 10:03 AM IST
Credit: Pinterest

நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது தங்கத்தின் விலை. கொரோனாவிற்கு முன்பு 4 ஆயிரத்து 100 ஆக இருந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது 5 ஆயிரத்து 100யைத் தாண்டிவிட்டது.

இந்த விலை உயர்வு, நடுத்தர வர்க்கத்தினரையும், பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அப்படியானால், மனிதர்களைவிட தங்கத்திற்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டே போகிறது என்பதே உண்மை.

இது ஒருபுறம் என்றால், இத்தனை விலைகொடுத்து வாங்கும் தங்கத்தை பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது.

சிறுசிறுகச் சேர்த்து வைத்த தங்கத்தை எப்படி பாதுகாப்பது என நினைப்பவரா நீங்கள்?
உங்கள் கவலையைப் போக்க மத்திய அரசு புதியத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 

Credit:Treat tier3

தங்க முதலீடு திட்டம்

இந்த திட்டத்தின் பெயர் Revamped Gold Deposit Scheme(R-GDS). மக்களிடம் தேவைக்கு அதிகமாக உள்ள தங்கத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் இலக்கு.

இதன்படி, மத்திய அரசின் கண்காணிப்பி, உங்கள் தங்க நகைகளை வங்கியில் பாதுகாப்பாக வைக்க முடியும். தங்கத்தைக் கொண்டு தங்கத்தைப் பெருக்கும் இலவசத் தங்கத்திட்டம் இது.

டபுள் பெனிஃபிட்

இந்த திட்டத்தில் உங்களுக்கு டபுள் பெனிஃபிட் (Double Benefit) கிடைக்கிறது. அதில் ஒன்று, உங்களுடைய ஜொலிக்கும் தங்கத்திற்கும் பாதுகாப்பு. இரண்டாவது நீங்கள் வைக்கும் தங்கத்திற்கு வட்டியும் உண்டு.

இலவசத் தங்கம்

அவ்வாறு முதலீடு செய்யும் தங்கத்திற்கு வட்டியைக் காசாகவும் பெற்றுக்கொள்ளலாம். விரும்பினால், தங்கமாகவும் வாங்கிக்கொள்ளலாம். இதன்மூலம் இலவசமாக தங்கத்தையும் நீங்கள் பெற முடிவதால், இது மைல்கல் பெனிஃபிட் தானே.

திட்டத்தின் அம்சங்கள்

இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு(NRI) அனுமதி இல்லை.

3 வகை முதலீடு

குறுகிய கால முதலீடு (1-3 வருடங்கள்).
நடுத்தர கால முதலீடு (5 -7 ஆண்டுகள்)
நீண்ட கால முதலீடு (12 – 15 )

இதன் மூன்றிலும் மத்திய அரசு சார்பாக முதலீடுகள் வங்கியால் பெறப்படும்.

எதனை முதலீடு செய்யலாம்?

தங்க நகைகள், தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள், கல் பதித்த நகைகள், மற்றும் விலைஉயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றை இந்தத் திட்டத்தின் கீழ் வங்கியில் முதலீடு செய்து பலனடையலாம்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்?

குறைந்தபட்சம் (Minimum)

ஒன்றரை லட்சம் மதிப்பிலான அதாவது 30 கிராம் தங்கத்தை முதலீடு செய்ய வேண்டும்.

அதிகபட்சம் (Maximum)

எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். உச்சவரம்பு கிடையாது.

வட்டி விகிதம்

குறுகிய கால முதலீட்டில், ஓராண்டிற்கு முதலீடு செய்யும் தங்கத்தின் மதிப்பில் இருந்து 0.5 சதவீதமும், ஓராண்டு முதல் 2 ஆண்டு வரை 0.55 சதவீதமும், இரண்டு முதல் 3 ஆண்டு வரை 0.60 சதவீதமும் ஆண்டிற்கு வட்டியாக வழங்கப்படுகிறது. நடுத்தரகால முதலீடுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வீதம் வட்டி வழங்கப்படும். கூட்டு வட்டி கிடையாது.

மேலும் படிக்க...

தங்க சேமிப்பு பத்திரத்தை வெளியிட்டது மத்திய அரசு!!

எஸ்பிஐ வாரிவழங்கும் வேளாண் தங்கக் கடன் - எளிதில் பெறுவதற்கான வழிமுறைகள்

English Summary: Gold Enrichment Scheme - Central Government Provides
Published on: 01 August 2020, 09:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now