News

Tuesday, 06 December 2022 11:37 AM , by: Elavarse Sivakumar

தங்கம் விலையில் தொடரும் அதிகரிப்பு, அதனை நடுத்தரவாசிகளுக்கு எட்டாக்கனியாகவே மாற்றிவிடுகிறது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் விலை நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ரூ.5 ஆயிரத்தைத் தாண்டிருப்பது, இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தனிப்பட்ட கவுரவம்

தங்க நகை அணிவதை ஆடம்பரமாகவும், கவுரவமாகவும் கருதுவதால், அதன் விலை எவ்வளவு ஏறினாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்படுகிறது.

தொடரும் அதிகரிப்பு

குறிப்பாக ரஷியா- உக்ரைன் இடையே போர் தொடர்வதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனம் முழுவதும் தங்கத்தின் பக்கமே இருக்கிறது. இதன் காரணமான முன் எப்போதும் இல்லாத வகையில், தங்கத்தின் விலையில் மாற்றம் நிலவி வருகிறது.

அதிரடி சரிவு

கடந்த சில நாட்களாகவே ரூ.4 ஆயிரத்திற்கும் கீழ் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை, டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், நேற்று ரூ.5045க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் ரூ.40,360க்கு விற்கப்பட்டது.

திருமண சீசன் துவங்குவதற்கு முன்பே, ஏற்பட்டு விலைஉயர்வு நிலையில், திருமணம் வைத்திருப்பவர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, புத்தாண்டில் தங்கத்தை வாங்கிச் சேமிக்க விரும்பும் இல்லத்தரசிகளுக்கு இந்த விலைஉயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க....

இந்த எருமையின் விலை ரூ.35 கோடி- பாதாம், பிஸ்தாதான் உணவு!

100% மானியத்தில் உளுந்து சாகுபடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)