மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 April, 2022 6:09 PM IST
Gold project suspended for wedding chain: Chief Minister's explanation

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், முந்தைய அதிமுக அரசு, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு, தமிழக அரசு சார்பில் உதவி வந்த திட்டங்கள் நிறுத்தி வைப்பு. ஏன், இதற்கான காரணம் என்ன?

இந்த திட்டத்தில், 1 பவுன் தங்கம் மற்றும் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 ஆயிரம் வழங்கி வந்ததது. அதேநேரம், 12ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதிவித் தொகையாக வழங்கி வந்ததது. இந்த திட்டத்தை தாலிக்கு தங்கம் திட்டம் என்று அழைக்கப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்காமல் கைவிட்டது. மேலும், கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதற்கு அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு இலவசமக கறவை மாடு வழங்குதல், நாட்டுக்கோழி வழங்குதல் போன்ற அதிமுக அரசின், மேலும் 2 திட்டங்களை திமுக அரசு நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு 2022ம் ஆண்டில் கறவை மாடுகள் மற்றும் நாட்டுக் கோழிகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. மேலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த, கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செம்மறி ஆடுகளை வழங்கும் திட்டத்தையும் தமிழக அரசு கட்டுப்படுத்து இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு தற்போதைய தமிழக அரசின் விளக்கம் (The current Tamil Nadu government's explanation for this):

திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு பிறகே பயனாளர்களுக்கு தாலிக்கு தங்கம் போய் சேர்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். பேரவையில், தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தினார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாலிக்கு தங்கத்திற்கு பதில் படிக்கும்போதே உதிவித் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க:

முந்திரி பருப்பு பயிர் லாபமா? என்னென்ன செய்ய வேண்டும்?

சென்னை: தங்கம் விலை உயர்வு: விலை என்ன?

English Summary: Gold project suspended for wedding chain: Chief Minister's explanation
Published on: 21 April 2022, 06:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now