News

Wednesday, 22 June 2022 11:02 PM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் 15 கிலோ நல்லெண்ணெய் விலை ஒரே வாரத்தில் ரூ.166 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏனெனில் இந்த விலைஉயர்வு, மக்கள் எதிர்பார்க்காத ஒன்று என்பதுதான் உண்மை.

ரூ.166

விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் உணவுப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் ரூ.4702க்கு (15 கிலோ) விற்பனை செய்யப்பட்ட நல்லெண்ணெய் ஒரே வாரத்தில் ரூ.166 வரை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அதன் விலை ரூ.4868 ஆக இருக்கிறது.

விலை உயர்வு

அதேபோல, குண்டூர் வத்தல் (100 கிலோ) கடந்த வாரம் அதிகபட்சமாக ரூ.21000 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் அதன் விலை ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ.21500க்கு வந்துள்ளது. அதோடு, நயம் துவரம் பருப்பு (10 கிலோ) கடந்த வாரம் ரூ.8900க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.200 உயர்த்தப்பட்டு ரூ.9100க்கு விற்பனையாகிறது.
பாசிப்பயறு கடந்த வாரம் ரூ.8600க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.200 உயர்த்தப்பட்டு ரூ.8800க்கு விற்கப்படுகிறது.

அதிகரிக்கும் ஆபத்து

பருப்பு வகைகள், வத்தல் மற்றும் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தின்பண்டங்கள் மற்றும் எண்ணெய் பலகாரங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் படிக்க...

45 ஆண்டுகளாக உணவருந்தா விவசாயி- உயிர்வாழும் அதிசயம்!!

பிளாஸ்டிக் தண்ணீர்- ஆய்வில் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)