News

Friday, 06 May 2022 04:13 PM , by: R. Balakrishnan

Groundwater in at least 9 districts in Tamil Nadu!

பொதுப்பணித்துறை சார்பில் மாதம் தோறும் கண்காணிப்பு கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் இருப்பு கணக்கிடப்படுகிறது. இந்த கணக்கீடு, முந்தைய ஆண்டு அதே மாதத்துடன் ஒப்பிட்டு அரசுக்கு அறிக்கையாக அளிக்கப்படுகிறது. ஏப்ரல் மாத கணக்குப்படி, அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 0.55 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் சரிந்துள்ளது.

நிலத்தடி நீர் (Ground Water)

தஞ்சை, நாகை, அரியலுார், ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் சிறிதளவு சரிவு கண்டறியப்பட்டுள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

நிலத்தடி நீரைக் குறையாமல் பாதுகாப்பது நமது கடமையாகும. வானிலிருந்து தண்ணீரை வரவழைக்க வேண்டுமே தவிர, நிலத்திலிருந்து தண்ணீரை எடுக்க கூடாது. நிலத்தடி நீரின் மட்டம் குறைவதால், உருவாகும் பிரச்சினைகள் அசாதாரணமானது.

மரங்களை வளர்ப்போம், மழை நீரைச் பெறுவோம் என்பதன் கூற்றுப்படி, அனைவரும் மரங்களை நட்டு பராமரித்துப் பாதுகாக்க வேண்டும். இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

மேலும் படிக்க

கோதுமை நிறுத்தி வைப்பு: மத்திய அரசு முடிவு!

கத்திரி வெயில் ஆரம்பம்: இனி அதிகபட்ச வெப்பநிலை தான்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)