அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 November, 2022 3:17 PM IST
Heavy rain for 4 districts- weather alert!

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கிறது. ஆனாலும், வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள தகவல்களை இந்த பதிவு வழங்குகிறது.

வடத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப் பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனக் குறிப்பிடுகிறது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24.11.2022 மற்றும் 25.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் கூறப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரம் வரை வானம் பொதுவாகவே மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும்.

22.11.2022 காலை வரையில் `சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அதோடு, இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையலாம் எனக் கூறப்படுகிறது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனக் குறிப்பிடப்படுகிறது.

மேலும் படிக்க

கரூர்: தமிழகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

English Summary: Heavy rain for 4 districts- weather alert!
Published on: 22 November 2022, 03:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now