News

Sunday, 30 January 2022 06:04 PM , by: R. Balakrishnan

Heavy rains during harvest

செஞ்சி பகுதியில் திடீரென மழை பெய்ததால் மார்க்கெட் கமிட்டியில் திறந்த வெளியில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது. செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மாதம் முதல் துவங்கி நெல் அறுவடை (Paddy Harvest) நடந்து வருகிறது.

70 சதவீதம் நெல் அறுவடை முடிந்த நிலையில் எஞ்சிய பகுதிகளில் அறுவடை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் எந்திரங்களை கொண்டு நெல் அறுவடை செய்ய முடியாமல் சேறும் சகதியுமானது.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள் (Bundles of paddy soaked in the rain)

பல இடங்களில் நெல் அறுவடையை தொடர முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வந்த 3,000 நெல் மூட்டைகள் திறந்த வெளியில் இருந்தன. அந்த மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்தன. இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.

கவலையில் விவசாயிகள் (Farmers Suffers)

அறுவடை நேரத்தில் மழை பெய்துள்ளதால், அறுவடையைத் தொடர் முடியாமலும், ஏற்கனவே அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனௌந்திருப்பதாலும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

நெல் கொள்முதல் மையங்களில், நெல் மூட்டைகளைப் பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

விவசாயிகள் கவனத்திற்கு: விதைச்சான்று பெற என்ன செய்ய வேண்டும்!

ஒருங்கிணைந்த பண்ணையம்: முதல் முயற்சியே வெற்றி கண்ட இயற்கை விவசாய தம்பதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)