News

Thursday, 17 February 2022 01:34 PM , by: R. Balakrishnan

Helmet mandatory for children

இருசக்கர வாகனங்களில், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து செல்கையில், கட்டாயமாக, 'ஹெல்மெட்' (Helmet) அணிவிக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய சட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஹெல்மெட் கட்டாயம் (Helmet Must)

இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்லப்படும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்லப்படும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இனி கட்டாயமாக, ஹெல்மெட் அணிவிக்க வேண்டும்.

சேப்டி ஹார்னஸ் (Safety Horns)

மேலும், பயணத்தின் போது குழந்தைகள் கீழே விழாமல் இருக்க, 'சேப்டி ஹார்னஸ்' எனப்படும் பாதுகாப்பு 'பெல்ட்' உடன் குழந்தைகளை இணைக்க வேண்டும். இந்த பெல்ட், அதிக எடை இன்றி, 'குஷன்' வசதியுடன், 30 கிலோ எடை வரை தாங்க கூடியதாக இருக்க வேண்டும்.

குழந்தைகளை இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்கையில், மணிக்கு 40 கி.மீ., வேகத்திற்கு மிகாமல் பயணிக்க வேண்டும். புதிய உத்தரவை மீறுவோருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், ஓட்டுனர் உரிமம் (Driving Licence) மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

பிளஸ் 2 தேர்வு ஆன்லைனில் நடத்த வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனுத்தாக்கல்!

ஊரடங்கு தளர்வுகளால் தமிழகத்தில் இன்று நர்சரி பள்ளிகள் திறப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)