மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 September, 2021 4:17 PM IST
TN Housing Board

வீட்டுவசதி வாரிய திட்ட பகுதிகளில், 19 ஆயிரத்து 558 வீடு, மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக,  துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, நந்தனத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய பழைய தலைமை அலுவலகம் மற்றும் அதன் எதிரில் உள்ள கட்டடம் அமைந்துள்ள நிலங்களை பயன்படுத்தி, வர்த்தக மையம் கட்டப்பட உள்ளதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை, தொழில்நுட்ப காரணங்களால் நடைமுறைபடுத்த முடியவில்லை.

தற்போது, மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, சாத்தியக்கூறுகள் இருந்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பட்டினப்பாக்கத்தில், எதிர்கால வணிகம், பொழுதுபோக்கு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் உள்ளது. இங்கு, வணிக மையம் அமைக்க, விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயலாக்க தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படும். வீட்டுவசதி வாரியம், இதுவரை 2.93 லட்சம் வீடு, மனைகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2.66 லட்சம் பேருக்கு, விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 5,450 வீடு, மனைகளுக்கு முழு தொகையும் செலுத்தப்பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் விற்பனை பத்திரம் வழங்கப்படாமல் உள்ளது. முழு தொகையும் செலுத்தியவர்களுக்கு, உடனடியாக விற்பனை பத்திரம் வழங்க, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, முழு தொகையும் செலுத்தாத ஒதுக்கீட்டாளர்களுக்கும், ஒரு சிறப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பெரிய நகரங்களில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, முக்கிய நகரங்களை சுற்றி, துணை நகரங்களை உருவாக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பொது மற்றும் தனியார் துறையால், நகரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஒழுங்குபடுத்தவும், ஒருங்கிணைந்த நகரியங்களுக்கான விதிமுறைகளை உருவாக்கும் பணிகள் செயல்படுத்தபட்டுள்ளன.

வீட்டுவசதி வாரியத்தில் தற்போது, 11 ஆயிரத்து 497 மனைகள், 8,061 குடியிருப்புகள் விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில் இவற்றை விற்பனை செய்வதன் வாயிலாக, வாரியத்தின் நிதி நிலை மேம்படும் என்றும்  வீட்டுவசதி வாரியத்தில், விற்பனையாகாமல் உள்ள வீடுகள், மனைகளை விற்பனை செய்ய, ஒரு விற்பனை பிரிவு, வருங்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:

கல்லூரி மாணவர்களுக்கு ஒரே மாதத்தில் 2 கொரோனா தடுப்பூசி?

சிலிண்டர் விலை உயர்வு! 1000 ரூபாயில் விற்பனை?

English Summary: Housing Board Ready to sell 19,558 houses, flats
Published on: 02 September 2021, 04:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now