மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 January, 2021 6:43 PM IST
Credit : The Scientist Magazine

மார்கழி பட்டம் நிலக்கடலை (peanuts) சாகுபடிக்கு ஏற்ற பட்டம். அதிக மகசூல் பெறுவதற்கு தை மாதத்திற்கு முன்பே நிலக்கடலை விதைக்கவேண்டும். நிலக்கடலையில் எண்ணெய் அளவு அதிகமாக இருந்தால் அதன் முளைப்புத்திறன் வேகமாக குறையும். சரியான முளைப்புத்திறன் உள்ள உயிருள்ள விதைகளை பிரித்து எடுத்து விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்.

உயிருள்ள விதைகளை பிரித்தெடுக்கும் முறை:

நன்கு முற்றாத உடைந்த சுருங்கிய மற்றும் நோய் தாக்கிய சிறிய விதைகளை அகற்ற வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 1/2 லிட்டர் என்ற அளவில் 0.5 சதவீத கால்சியம் குளோரைடு (Calcium chloride) உப்புக் கரைசலில் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். சிறிய பருப்பாக இருந்தால் ஏக்கருக்கு 50-55 கிலோ, பெரிய பருப்பாக இருந்தால் 55 - 60 கிலோ விதைப் பருப்பை, 125 கிராம் கால்சியம் குளோரைடு உப்பை 25 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். ஊறவைத்த விதைகளை இரண்டு ஈர சாக்குகளுக்கிடையே மெல்லியதாக பரப்பி 16 மணி நேரம் இருட்டில் மூட்டம் வைக்க வேண்டும். இந்த சமயத்தில் உயிருள்ள விதைகளிலிருந்து சுமார் 5 மி.மீ அளவு முளைக்குருத்து வெளிவரும். இவற்றை தனியே பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை முளைவிட்ட விதைகளை 3 முறை பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த (dry) வேண்டும்.

விதை நேர்த்தி

தேர்வு செய்த விதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பென்டாசிம் (Carbendazim) என்ற பூஞ்சாணக் கொல்லி மருந்தை, 5 மிலி நீரில் கலந்து விதை நேர்த்தி (Seed treatment) செய்து நிழலில் உலர்த்த வேண்டும் அல்லது ஏக்கருக்கு 250 முதல் 300 கிராம் ரைசோபியம் (Rhizobium) உயிர் உரத்துடன் விதைப்பருப்பை அரிசி வடித்த கஞ்சியுடன் கலந்து உடனே விதைக்க வேண்டும். முளைவிடாத இறந்த விதைகளை எண்ணெய் (oil) எடுக்க பயன்படுத்தலாம். இதனால் வயலில் போதுமான அளவு செடிகளை, விதைகளை விரயம் செய்யாமல் பெறலாம்.

விதைகளை கால்சியம் குளோரைடு கரைசலில் ஊற வைப்பதால், கால்சியம் குறைபாட்டால் வரக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்தி 10 முதல் 15 சதவீதம் கூடுதல் விளைச்சலை பெறலாம். பூஞ்சாணக்கொல்லி விதை நேர்த்தி செய்வதால் விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம் . உயிர் உரம் (Bio-fertilizer) கொண்டு விதை நேர்த்தி செய்வதால் காற்றில் உள்ள தழைச்சத்து (Nutrient) நிலைப்படுத்தப்பட்டு உரச்செலவு குறையும்.

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள:

சிங்காரலீனா
விதை பரிசோதனை அலுவலர்
கண்ணன்
வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம்
திண்டுக்கல்
97883 56517

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க 100-வது கிசான் விவசாயிகள் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

பூச்சி / நோய்த் தாக்குதலால் சின்ன வெங்காயத்தின் விலையில் பெரும் தாக்கங்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் மீன்களுக்கு ஏற்ற இயற்கைப் பை!

English Summary: How to properly divide the germinated peanuts and increase the yield?
Published on: 01 January 2021, 06:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now