மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 October, 2020 5:22 PM IST

நம்முடைய ஓய்வுகாலத்தில், நிம்மதியாகவும், மனநிறைவோடும் வாழ்வதைவிட, நம் பொருளாதாரத் தேவைகளை நாமே எதிர்கொள்ளும் நிலையில் இருக்கவேண்டும் என்பதுதான் பலருடைய ஆசை.

இத்தகைய வாழ்க்கை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இயல்பாகவேக் கிடைத்துவிடும். குழந்தைகளும், பெற்றோருக்கு Pension என்னும் ஓய்வூதியம் கிடைக்கும், அதிலும் நமக்கு பங்கு இருக்கும் என நம்பிக்கையோடு காத்திருப்பர்.

அதே நேரத்தில் தனியார் நிறுவனப் பணியாளர்களைப் பொருத்த வரை, ஓய்வு காலம் என்பது பலத்த சவால் மிகுந்தது. கடும் நெருக்கடி மிகுந்ததாகவும் அமையலாம்.

ஆக உங்கள் ஓய்வு காலம் குறித்து கவலைப்படுவரா நீங்கள்? உங்களை கவலைக்கு மருந்தாக அமைகிறது LICயின் இந்த பாலிசி. இந்த பாலிசியின் பெயர் ஜீவன் ஆனந்த் (Jeevan Anand). இதில் நாள் தோறும் ரூ.80 செலுத்தினால் போதும். மாதத்திற்கு ஓய்வூதியமாக ரூ.28 ஆயிரம் கிடைக்கும்.

ஒரு லட்சம் முதலீடு செய்து 2 லட்சம் திரும்பி பெறலாம்!! 100% லாபம் தரும் கிசான் விகாஸ் பத்திர திட்டம் - மூலம் விபரம் உள்ளே!!

எப்படி முதலீடு (How to Invest)

இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வயது வரம்பு 28 ஆக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின்படி குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் கழிந்தபிறகு ஓய்வூதியம் கிடைக்கும். LICயின் மிகச்சிறந்த பாலிசிகளில் இதுவும் ஒன்று. இதில் குறைந்தபட்ச உறுதித்தொகை ரூ.1 லட்சம். அதிகபட்சம் வரம்பு இல்லை.

என்டோமெண்ட் பாலிசி (An endowment policy)

இதில் முதலீடு செய்யும்போது, பணத்திற்கும் பாதுகாப்பு. உங்களுக்கு ஆயுள் காப்பீடும் கிடைக்கும். ஒரு நபர் தன்னுடைய 25வது வயதில் இருந்து முதலீடு செய்ய ஆரம்பித்தால், 35 வருடங்கள் கழித்து, ஓய்வூதியம் பெற முடியும்.

ப்ரீமியம் 

இந்த திட்டத்திற்கு ப்ரீமியம் தொகையாக நாள் தோறும் ரூ.80 ரூபாய் செலுத்தப்படுகிறது. முதல் ஆண்டில் இதற்கு 4.5 சதவீத வரியும் சேர்ந்து வரும். 35 வருடங்கள் ப்ரீமியம் தொகையை செலுத்தினால் அதன் மதிப்பு 50 லட்சத்து 15ஆயிரமாக இருக்கும். இதற்கு வருடத்திற்கு 3 லட்சத்து 48 ஆயிரத்து 23 ரூபாய் பென்சனாக வழங்கப்படுகிறது. இதன்படி மாதாந்திர பென்சன் தொகை என்றால் அது 27 ஆயிரத்து 664 ரூபாயாக இருக்கும். 

மேலும் படிக்க...

மினிமம் பேலன்ஸ் லிமிட் குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு!

கேரட் உற்பத்தியை அதிகரிக்க புதிய முயற்சி-அரசு சார்பில் கேரட் கழுவும் இயந்திரம்!!

English Summary: If you pay Rs 80 daily, you will get Rs 28,000 pension-LIC's new policy!
Published on: 14 October 2020, 08:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now