1. தோட்டக்கலை

கேரட் உற்பத்தியை அதிகரிக்க புதிய முயற்சி-அரசு சார்பில் கேரட் கழுவும் இயந்திரம்!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
The best way to increase carrot production in Ooty -  Carrot washing machine on behalf of the government!
Credit : The Hindu

ஊட்டியில் கேரட் உற்பத்தியை 60 சதவீதம் அதிகரிக்க ஏதுவாக அரசு சார்பில் 5 இடங்களில் கேரட் கழுவும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசால், 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், சிறு நிறுவனங்களுக்கான உணவு பதப்படுத்தும் திட்டம், 2021-25ம் ஆண்டு வரை அமல்படுத்தப்படுகிறது. அதில், நீலகிரி மாவட்டத்திற்கு, கேரட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை, மொத்த மலை காய்கறி உற்பத்தியில், 40 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த கேரட் உற்பத்தியை அடுத்தாண்டு முதல், 60 சதவீதமாக உற்பத்தியை உயர்த்த வேளாண்மை துறையினர் நடவடிக்கை எடுத்து, கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, கேரட்டை சுத்தப்படுத்தி சந்தைக்கு அனுப்ப, அரசு சார்பில் அணிக்கொரை, தாவணெ, சுள்ளி கூடு, ஒட்டி மர ஒசஹட்டி, அல்லஞ்சி ஆகிய பகுதிகளில் கேரட் கழுவும் நவீன இயந்திரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதன் மூலம் நாள் ஒன்றுக்கு, 10 முதல் 12 டன் அளவுக்கு கேரட்களை கழுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,'' அரசு சார்பில் மாவட்டத்தில், 5 இடத்தில், கேரட் கழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் உற்பத்தி செய்த கேரட் முழுவதையும் குறைந்த விலையில், இங்கு வந்து கழுவி பயனடைய வேண்டும்,'' என்றார்.

மேலும் படிக்க...

பாரம்பரிய விதைநெல் விற்பனை- இயற்கை விவசாயிகள் கவனத்திற்கு!

அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்திக்கு மானியம்!

English Summary: The best way to increase carrot production in Ooty - Carrot washing machine on behalf of the government! Published on: 12 October 2020, 09:34 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.