சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 5 September, 2023 3:22 PM IST
INDIA vs BHARAT issue begins
INDIA vs BHARAT issue begins

நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடிபிடிப்பது வழக்கம். ஆனால் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது அசுர பலத்தில் தினசரி புதிய அரசியல் பிரச்சினைகள், சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. ஆனால் இப்போது நாட்டின் பெயரையே மாற்றும் அளவிற்கு புதிய விவாதம் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் ஜி20- உச்சி மாநாடு டெல்லியில் நடைப்பெற இருக்கும் வேளையில், ஜனாதிபதி மாளிகையில் இருந்த வெளியான அழைப்பிதழ் விவாதப் பொருளாகி உள்ளது. செப்டம்பர் 9 ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடைப்பெற உள்ள விருந்தில் பங்கேற்க விடுத்துள்ள அழைப்புக் கடிதத்தில் 'பாரதத்தின் ஜனாதிபதி' (President of Bharat) எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக (President of India) – ‘இந்திய ஜனாதிபதி’ என குறிப்பிட்டு வந்த நிலையில், இது என்ன புதியதாக பாரத் என சர்ச்சை கிளம்பியுள்ளது.

அதற்கு காரணமும் இருக்கிறது. ஆளும் ஒன்றிய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்துள்ள கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A) என பெயரிடப்பட்டுள்ளது. இது ஆரம்பம் முதலே பாஜகவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ச்சியாக இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என மாற்ற வேண்டும் என பேசி வரும் நிலையில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு வருகிற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இதுத்தொடர்பாக புதிய மசோதாவை தாக்கல் செய்யலாம் என இப்போதே பேச்சுகள் எழுந்துள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் (AAP) ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ”நமது நாடு 140 கோடி மக்களைக் கொண்டது. இந்திய கூட்டணியின் பெயரை ( I.N.D.I.A)  ‘பாரத்’ கூட்டணி என்று மாற்றினால், அவர்கள் (பாஜக) ‘பாரத்’ என்ற பெயரையும் மாற்றுவார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் X (டிவிட்டர்) தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். "ஜனாதிபதி மாளிகை அழைப்பு கடிதம் குறித்த தகவல் உண்மை தான். இப்போது, அரசியலமைப்புச் சட்டத்தில் “பாரதம், அது இந்தியா, மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என உள்ளது. ஆனால் இப்போது இந்த ‘யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்’ உள்ளாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், "பாரத்" என்ற வார்த்தையால் எதிர்க்கட்சிகள் கூறப்படும் அசௌகரியம் குறித்து பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் கூறுகையில், “பாரதம் என்று சொல்வதிலும் எழுதுவதிலும் ஏன் சிக்கல் இருக்கிறது? ஜெய்ராம் ரமேஷ் ஏன் வெட்கப்படுகிறார்? நமது தேசம் பழங்காலத்திலிருந்தே பாரதம் என்று அழைக்கப்பட்டு, நமது அரசியலமைப்பில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. காரணமே இல்லாமல் தவறான புரிதலை ஏற்படுத்த முயல்கின்றனர்” என்றார்.

இந்தியா நாட்டின் பெயரை பாரத் என அழைக்க ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தும், மற்றொரு தரப்பினர் கடுமையாக எதிர்த்தும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் நடைப்பெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் அத்தனை சர்ச்சைகளுக்கும் தீனி போடுவது போல் உள்ள நிலையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் காண்க:

TNPSC மூலம் தேர்வான 65 மீன்துறை ஆய்வாளர்களின் பணி என்ன?

4 மாவட்டங்களில் கனமழை- தமிழக மீனவர்களுக்கு பலத்த எச்சரிக்கை

English Summary: INDIA vs BHARAT issue begins from Rashtrapati Bhawan invite letter
Published on: 05 September 2023, 03:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now