News

Friday, 07 August 2020 07:08 AM , by: Elavarse Sivakumar

2019ம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப்பணி தேர்வில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்தியக் குடிமைப்பணி 2019ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் 58-வது இடம் பிடித்துள்ள செல்வி.எஸ்.எஸ்.பரணி, கடந்த 2010-14ம் ஆண்டில் கோவையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை வேளாண்மை படிப்பில் பட்டம் பெற்றவர்.

499-வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ள எஸ்.சங்கீதா, கடந்த 2014ல் மதுரையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை வேளாண்மைப் பட்டம் பயின்றவர்.

559-வது இடம் பிடித்த எஸ்.அபிநயா, கோவையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2010-2014ம் ஆண்டு இளங்கலை வேளாண்மைப் பட்டம் முடித்தவர்.

இதேபோல் கடந்த 2011-2015ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பயின்ற கோத்தகிரியைச் சேர்ந்த மல்லிகா, குடியுரிமை பணி தேர்வில், 621-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

திருச்சியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 2015ம் ஆண்டு இளங்கலை வேளாண்மை படிப்பை முடித்த, வெங்கடேச பிரபு 751-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர்கள் ஐந்து பேருக்கும், தமிழநாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் குமார் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

மலர் சாகுபடி செய்ய விருப்பமா? பயிற்சி அளிக்கிறது வனவியல் கல்லூரி!

தோட்டக்கலை பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை - இணையதளத்திலேயே விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)