News

Thursday, 04 May 2023 12:07 PM , by: Muthukrishnan Murugan

உலக வங்கியின் 25 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழு நேற்று அமெரிக்கா வாழ் இந்தியரான அஜய் பங்காவை உலக வங்கியின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. வருகிற ஜூன் 2 முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா செயல்பட உள்ளார்.

உலக வங்கி இரண்டாம் உலகப் போரின் முடிவில் நிறுவப்பட்டதிலிருந்து ஒரு அமெரிக்கரால் வழிநடத்தப்படுகிறது, அதே நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் ஒரு ஐரோப்பியரால் வழிநடத்தப்படுகிறது. இந்தியாவில் பிறந்து தனது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அஜய் பங்கா, 2007 முதல் அமெரிக்க குடியுரிமை பெற்று உள்ளார்.

பங்கா அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் எல்பியில் துணைத் தலைவராக பணியாற்றுகிறார். அதற்கு முன், அவர் மாஸ்டர்கார்டின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணிபுரிந்து உள்ளார். ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட, சிட்டிகுரூப் இன்க் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளையும் வகித்து உள்ளார்.

மகாராஷ்டிராவின் புனே நகரில் பிறந்த பங்கா, தில்லி பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM-A) நிர்வாகத்தில் பிஜிபியும் பெற்றுள்ளார். 2016 இல், இந்திய அரசு இவரது சேவையினை பாராட்டி நாட்டின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

அஜய் பங்கா நெஸ்லே நிறுவனத்தில் தனது பணியை தொடங்கினார், அங்கு அவர் 13 ஆண்டுகள் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் பொது மேலாண்மை ஆகியவற்றில் பணிபுரிந்தார். பின்னர் அவர் பெப்சிகோவுடன் இணைந்து இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். அந்தக் காலக்கட்டத்தில் அங்கு அதன் துரித உணவு உரிமைகளை இந்தியாவில் தொடங்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

அஜய் பங்காவை புகழும் அமெரிக்க அதிபர் பைடன்:

பிப்ரவரியில் உலக வங்கியின் உயர் பதவிக்கு அவரைப் பரிந்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி பிடன் தெரிவிக்கையில், "வரலாற்றின் இந்த முக்கியமான தருணத்தில் உலக வங்கி நிறுவனத்தை வழிநடத்துவதற்கு பங்கா தனித்துவமாகத் தயாராக இருப்பதாகக் கூறினார். "அவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வெற்றிகரமான, உலகளாவிய நிறுவனங்களை உருவாக்கி நிர்வகிக்கிறார், அதன்மூலம் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளார் மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு முதலீட்டை அதிகளவில் ஈர்த்துள்ளார்” என்றார்.

அஜய் பங்கா 2021 இல் ஜெனரல் அட்லாண்டிக்கின் காலநிலை-மையப்படுத்தப்பட்ட நிதியான BeyondNetZero க்கு ஆலோசகராக பொறுப்பேற்றார். எல் சால்வடாரில் உள்ள பின்தங்கிய மக்களிடையே பொருளாதார வாய்ப்பை மேம்படுத்துவதற்காக செயல்படும் தனியார் நிறுவனங்களின் கூட்டணியான மத்திய அமெரிக்காவின் கூட்டாண்மையின் இணைத் தலைவராகவும் பங்கா பணியாற்றி உள்ளார்.

Image source- Allevents.in

மேலும் காண்க:

ரேஷன் கடையில் ராகி வழங்கும் திட்டம் தொடக்கம்- மற்ற மாவட்டத்தில் எப்போது?

உழவன் செயலியில் புதிய அப்டேட்- கூலி வேலையாட்கள் பிரச்சினைக்கு தீர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)