சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 26 April, 2022 3:24 PM IST
Infectious Disease in IIT Chennai Students..
Infectious Disease in IIT Chennai Students..

மேலும் 32 புதிய கோவிட் -19 வெடிப்புகள் செவ்வாய்க்கிழமை காலை இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை (ஐ.ஐ.டி-சென்னை) வளாகத்தில் பதிவாகியுள்ளன. இதையடுத்து ஐ.ஐ.டி சென்னை கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக திங்கள்கிழமை, ஐஐடி-மெட்ராஸ் மாணவர்கள் 18 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் நேற்றைய மொத்த எண்ணிக்கை 78 ஆக இருந்தது. நேற்று மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 1,121 மாதிரிகளின் முடிவுகள் செவ்வாய்கிழமை வெளியாகும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை, தமிழகத்தில் 55 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகினன. இதனால் மொத்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 34,53,607 ஆக உள்ளது. இறப்பு எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. இன்று எந்த இறப்பும் பதிவாகவில்லை என்று சுகாதார துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று தொற்று உறுதியான 55 பேரில் அஸ்ஸாமில் இருந்து சாலை வழியாக திரும்பிய நபர் ஒருவரும் அடங்குவர். RT-PCR மூலம் சோதனை செய்தவர்களில் 33 ஆண்கள் மற்றும் 22 பெண்களுக்கு தொற்று உறுதியானது

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் டாக்டர். ஜே ராதாகிருஷ்ணன், சென்னை மண்டல மருத்துவ அதிகாரி டாக்டர் ஆல்பி ஆகியோருடன் கல்லூரிக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

முன்னதாக, நேற்று முன் தினம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதன் எதிரொலியாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க..

தமிழகத்தில் திடீரென்று அதிகரித்த கொரோனா பாதிப்புகள்!

சென்னை ஐஐடி-க்கு விமானத்தில் வந்த அரசு பள்ளி மாணவர்கள்!

English Summary: Infectious Disease in IIT Chennai; Corona for 32 Students!
Published on: 26 April 2022, 03:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now