மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 May, 2022 4:38 PM IST
Interruption in the textile industry: Tamil Nadu CM requests to PM!

பருத்தி மற்றும் நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் சந்தித்து வரும் கடுமையான இடையூறுகளைத் தீர்க்க பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பருத்திக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை மத்திய அரசு திரும்பப் பெற்ற போதிலும், பருத்தி மற்றும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பருத்தி மற்றும் நூல் விலை உயர்வைக் கண்டித்து, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகள் திங்கள்கிழமை முதல் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், "இந்த சூழ்நிலை தமிழகத்தில் ஜவுளித் தொழிலுக்குப் பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆடை உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், பல MSME யூனிட்கள் ஏற்கனவே தங்கள் செயல்பாடுகளை மூடிவிட்டதாகவும் முதல்வர் கூறினார். இதனால் ஒரு துறையில் பெரும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய ஸ்டாலின், கூட்டுறவுத் துறையில் உள்ள கைத்தறி நெசவாளர்களால் நூலைக் கொள்முதல் செய்ய முடியாமல் உள்ளது. அதோடு, துணி நெசவு செய்யும் உறுப்பினர்களுக்கு வழங்க முடியாததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

உடனடி நடவடிக்கையாக, பருத்தி மற்றும் நூலுக்கான இருப்பு அறிவிப்பை அனைத்து நூற்பாலைகளுக்கும் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். இதனால் ஜின்னர்கள் மற்றும் பருத்தி வியாபாரிகள் பருத்தி மற்றும் நூல் கிடைப்பது குறித்த உண்மையான தகவல்களைப் பெற முடியும்.

இந்த விவகாரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாக முதல்வர் கூறினார்.

"மத்திய அரசு நிலைமை மற்றும் கோரிக்கையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, பருத்திக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு சரக்குகள் இந்திய துறைமுகங்களைச் சென்றடைய மூன்று மாதங்களுக்கும் மேலாகும் என்பதால், திறம்பட இறக்குமதி வரி தள்ளுபடி ஜூன் 30 வரை மட்டுமே கிடைக்கும்," என்றும் கூறியிருக்கிறார்.

விவசாயிகளிடம் பருத்தி கிடைப்பது நான்கு மாதங்கள் வரை நீடிப்பதாகவும், தற்போது நூற்பாலைகளுக்குப் பருத்தி கொள்முதல் செய்ய வங்கிகள் ரொக்கக் கடன் வரம்பை மூன்று மாதங்களுக்கு மட்டுமே வழங்குகிறது.

எனவே, பருத்தி கொள்முதல் செய்வதற்கான நூற்பாலைகளின் ரொக்கக் கடன் வரம்பை ஆண்டுக்கு எட்டு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இதேபோல், வங்கிகள் வாங்கும் மதிப்பில் 25% உள்ள மார்ஜின் பணம் 10% ஆகக் குறைக்கப்படலாம். ஏனெனில் வங்கிகள் வாங்கும் பங்கு மதிப்பை சந்தையில் உண்மையான கொள்முதல்/சந்தை விகிதங்களைக் காட்டிலும் குறைவான விலையில் கணக்கிடுகின்றன. எனவே, இவ்விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க

சிறு தொழில் தொடங்க 10 லட்சம் பெறலாம்! விவரம் உள்ளே!!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!: வானிலை ஆய்வு மையம்

English Summary: Interruption in the textile industry: Tamil Nadu CM requests to PM!
Published on: 16 May 2022, 04:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now