மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 August, 2022 10:33 AM IST
It is mandatory for Government Grants: Govt Notice!!

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பல்வேறு மானியங்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் அந்த மானியங்களைப் பெறுவதற்கு சில நெறிமுறைகளை அரசு வெளியிட்டு வருகிறது. அந்த நிலையில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றைக் குறித்துதான் இப்பதிவு விளக்குகிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியங்களையும் சேவைகளையும் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இதுவரை ஆதாரைப் பயன்படுத்தித் திட்டங்களைப் புதுப்பித்த நிலையில் இனி ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுபவர்களுக்கு ஆதார் விதிகளைக் கடுமையாக்கும் வகையில் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையினை வெளியிட்டது.

அந்த சுற்றறிக்கையின்படி, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் மானியங்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் எனவும், அதார் வழங்கப்படாத சூழலில், நிரந்தர ஆதார் அட்டை பெரும்வரை ஆதார் பதிவு செய்த எண்ணைப் பயன்படுத்தி சேவைகளைப் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டு இல்லை என்றால், அரசின் சார்பாக வழங்கப்படும் மானியங்களையும், பலன்களையும் பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தற்போது ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு குவியும் மானியங்கள்! இன்றே விண்ணப்பியுங்க!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: அரசு அறிவிப்பு!

English Summary: It is mandatory for Government Grants: Govt Notice!!
Published on: 17 August 2022, 10:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now