கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! PM kisan 17 வது தவணை: பிரதமரின் முதல் கையெழுத்து விவசாயிகளுக்காக! NADCP திட்டம்: கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க ஒரு வாய்ப்பு Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு! கிணறு தோண்ட அரசிடமிருந்து கடனுதவியா? கரும்பு விவசாயி விளக்கம் Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 May, 2023 11:23 AM IST
Kanyakumari farmers request to dig the canals!

விவசாயிகள் சங்கப் பொறுப்பாளர் செண்பகராமன்புதூரைச் சேர்ந்த என்.ராக்கிசமுத்து கூறியதாவது: பெரும்பாலான பகுதிகளில் நேரடி விதைப்பு முறையில் கன்னிப்பூ நெல் சாகுபடி துவங்கியுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்து திருப்தி தெரிவித்த விவசாயிகள், வரும் மாதங்களில் சாகுபடிக்குப் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். கோடை மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள அணைகளில் வியாழக்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளது. இருப்பினும், ஜூன் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன், வாய்க்கால்களில் தூர்வாரவும், மதகுகளை சீரமைக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோதையாறு பாசன அமைப்பின் முன்னாள் தலைவர் கூறுகையில், கடந்த 2, 3 ஆண்டுகளில், மே மாதத்தின் உச்ச கோடை நாட்களில் மாவட்டம் முழுவதும் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து திருப்திகரமாக இருந்தது. ஜூன் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து பாசனத் தேவைக்கான தண்ணீர் திறக்கப்படும் என்றும், வாய்க்கால்கள் இன்னும் தூர்வாரப்படவில்லை என்றார். கால்வாய்களை முறையாக தூர்வாராமல், தொட்டிகளுக்கு தண்ணீர் வராதும் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான பகுதிகளில் நேரடி விதைப்பு முறையில் கன்னிப்பூ நெல் சாகுபடி துவங்கியுள்ளது. ஆனால், செண்பகராமன்புதூர், தோவாளை பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், இங்குள்ள விவசாயிகள் நேரடி விதைப்பு முறையை தேர்வு செய்ய முடியாமல் தவித்தனர். அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க இன்னும் ஒரு வாரமே உள்ளது. தோவாளை வாய்க்கால் செல்லும் மதகுகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. விரைவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 1,000 ஏக்கரில் நெல் சாகுபடி தொடங்கியுள்ளது என்றும், சாகுபடியை முடிக்க அப்பகுதியில் உள்ள அணைகள், தொட்டிகளில் தண்ணீர் இருந்தால் போதும், என்றும் கூறப்படுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள அணைகளில் உள்ள நீர் சாகுபடிக்கு போதுமானது என மீண்டும் வலியுறுத்திய வேளாண்மை வளர்ச்சி அலுவலர் ஒருவர், அடுத்து வரும் பருவ மழையும் மாவட்டத்தில் போதிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை நிலவரப்படி முக்கிய அணைகளின் நீர்மட்டம் என்று பார்க்கும்பொழுது, அணையின் தற்போதைய நிலை (அடியில்) முழு கொள்ளளவு (அடியில்) எனும் நிலையில் பேச்சிப்பாறை 39.75 48 எனவும், பெருஞ்சாணி 41.55 77 எனவும், சித்தர்-I 10 18 எனவும், சித்தர் II 10.10 18 எனவும்,பொய்கை 13 42.65 எனவும்,மாம்பழத்துறையாறு 2.30 54.12 எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

நாட்டிலேயே சிறந்த நகரம்! கோவைக்கு அடிச்சது ஜாக்பாட்!!

ஒகேனக்கல்லில் கேமராக்கள், எச்சரிக்கை பலகைகள்! விபத்துகளை தடுக்க புதிய நடவடிக்கை!!

English Summary: Kanyakumari farmers request to dig the canals!
Published on: 27 May 2023, 11:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now