நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 November, 2022 4:41 PM IST
Kasi Tamil Sangam

வாரணாசியில் நடந்து வரும் காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சியில் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்களைப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்ககமும் நடத்தப்படுகிறது. கடந்த 17ம் தேதி காசி தமிழ்சங்கமம் தொடங்கினாலும், முறைப்படி 19ம்தேதி(இன்று) பிரதமர் மோடி தொடங்கி வைத்தி நடத்தினார். இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் 17ம் தேதிவரை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான தொடர்புகளை வெளிக்கொணரும் வகையில் அறிஞர்கள் இடையே கல்வி சார் பரிமாற்றங்கள், ஆக்கப்பூர்வமான கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பல்துறை அறிஞர்கள் பங்கேற்கும் விதத்தில் தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணிக்க இருக்கின்றனர்.

காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வாரணாசியில் பிரதமர் மோடி முறைப்படி தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா, ஆளுநர் ஆனந்திபென், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமம் நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி எண்ணம் வந்தது என வியக்கிறேன் என இசையமைப்பாளர் இளையராஜா தொடக்க உரையில் குறிப்பிட்டார். உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் வரவேற்புரையாற்றினர். இளையராஜாவின் இசைக் கச்சேரியும், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத நிகழ்ச்சி தொடங்கியது.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்களை வெளியிட்டார். மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை மேடையில் இருந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பெற்றுக்கொண்டார் எனப்து குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

TNPSC Group Exam: புதிய விதிமுறைகளுடன் நடைபெற்ற தேர்வு!

பொங்கல் பரிசு தொகுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

English Summary: Kasi Tamil Sangam: Thirukkural Publication Translated into 13 Languages (1)
Published on: 20 November 2022, 04:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now