அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 April, 2023 3:54 PM IST
Kisan Credit card

விவசாயிகளின் நலனுக்காக மத்திய மோடி அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) யோஜனா திட்டம். இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6000 ரூபாய் நிதியுதவி தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதுவரையில் மொத்தம் 13 தவணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், 14ஆவது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit card)

பிஎம் கிசான் திட்டப் பயனாளிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு என்ற கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டம் 1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. விவசாயிகளின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்யவும், தொடர்ந்து விவசாயத் தொழிலில் ஈடுபடவும் உதவி செய்யும் வகையில் இத்திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.

குறைந்த வட்டி

கிசான் கிரெடிட் கார்டு மூலமாக கடன் வாங்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 2 சதவீத வட்டியில் தொடங்கி கடன் கிடைக்கும். சராசரியாக 4 சதவீத வட்டி விகிதத்தில் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையில் கடன் வாங்கலாம். இதில் ரூ.25,000 வரை காப்பீட்டு வசதியும் உள்ளது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வேளாண் கடன் அட்டை மூலம் அளிக்கப்படும் வசதிகள் குறித்து ஹத்ராஸ் மக்களவை உறுப்பினர் ராஜ்வீர் திலேர் ட்விட்டரில் கூறியுள்ளார். இந்த ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், “நமது கடின உழைப்பாளிகளான உணவளிப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை வேளாண் கடன் அட்டை எளிதாக்கியுள்ளதை காணுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுதான் அதன் நோக்கம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 42% ஆக உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!

சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம்: பயன்பெறுவது எப்படி?

English Summary: Kisan Credit Card for Farmers: PM Modi Praises!
Published on: 07 April 2023, 03:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now