1. செய்திகள்

அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 42% ஆக உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Allowance hike

நாட்டில் மத்திய அரசைத் தொடர்ந்து, தற்போது கோவா மாநில அரசும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அகவிலைப்படி (Allowance)

இந்தியாவில் கடந்த மாதம் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி அகவிலைபடியை 4% சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இதன் வாயிலாக 47.58 லட்சம் அரசு ஊழியர்களும் 69.76 ஓய்வூதியர்களும் பயன் பெற்று வருகின்றனர். தற்போது உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி 2023 ஜனவரி 1ஆம் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 42 சதவீதத்தை அகவிலைபடியாக பெற்று வருகின்றனர். மத்திய அரசை தொடர்ந்து ராஜஸ்தான், ஜார்கண்ட், பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களும் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த நிலையில் கோவா மாநில அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 38% சதவீதத்தில் இருந்து 42% மாக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த புதிய அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதியிட்டு கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியுடன் ஜனவரி முதல் மார்ச் வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகையும் இம்மாதம் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

ஃபிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு: கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!

சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம்: பயன்பெறுவது எப்படி?

English Summary: Increase in gratuity to 42% for government employees: State government announcement! Published on: 06 April 2023, 04:35 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.