News

Monday, 07 February 2022 02:26 PM , by: R. Balakrishnan

Covid cases in INDIA

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 83,876 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,876 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,72,014 ஆனது. 

கோவிட் புள்ளி விவரம் (Covid Statistics)

கடந்த 24 மணி நேரத்தில், 1,99,054 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,06,60,202 ஆனது. தற்போது 11,08,938 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 895 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,02,874 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 169.63 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 14,70,053 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

BA.2 வைரஸ் (BA.2 Virus)

ஒமிக்ரான் வைரஸின் மாறுபாடு உலகெங்கும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ஒமிக்ரான் பிஏ 1 வேரியண்ட் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது பிஏ2 வேரியண்ட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிஏ3 வேரியண்ட்டும் இதில் வெளிவந்திருக்கிறது. ஒமிக்ரான் வைரசின் 'பிஏ.2' வேரியண்ட் இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 40 நாடுகளில் பரவியுள்ளது.

மேலும் படிக்க

மாஸ்க்குக்கு மாற்றாக கோஸ்க்: தென் கொரியாவில் அறிமுகம்!

பரிசோதனையில் சிக்காத BA.2 வைரஸ்: தடுப்பூசி வேலை செய்யுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)