மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 August, 2020 5:06 PM IST

மதுரையில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.4000 வரை மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலை துறை கூறியுள்ளது. இதில் சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தோட்டக்கலைத் துறை சார்பில் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் விதமாக இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.

இது குறித்து, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரேவதி கூறுகையில், மதுரை மாவட்டத்திற்கு இயற்கை விவசாயத்தை ஊக்கவிக்க 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை விவசாயம் செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,500 மற்றும் காய்கறி பயிர்கள் விவசாயம் செய்ய ரூ.3,800 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள். சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகப்பட்சம் 2 ஹெக்டேருக்கு ஊக்கத்தொகை பெறலாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். கூடுதல் விவரங்களுக்கு தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்திதை அணுகலாம்..

மேலும் படிக்க...

உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி உதவி!!

ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைப்பொருள் : விழுப்புரத்தில் வேர்க்கடலை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு மானியம்!!

English Summary: Madurai District announced Subsidy for Organic Farmers and priority for women farmers
Published on: 20 August 2020, 04:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now