மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 October, 2020 2:18 PM IST
Credit: Dinakaran

மதுராந்தகம் நகராட்சியில் கடந்த 1952ம் ஆண்டு முதல் அரசு கால்நடை மருந்தகம் (Government Veterinary Pharmacy) செயல்படுகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, செயல்படும் இந்த மருந்தகத்தை, கால்நடை மருத்துவமனையாக (Veterinary Hospital) தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கால்நடை மருந்தகத்தில் 5000 அலகுகள் வரை சிகிச்சை (Treatment) அளிக்க முடியும். ஒரு அலகு என்பது மாடுகளின் எண்ணிக்கையில் 1, செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி, கழுதைகளில் 10 என பொருள். இதுபோல், ஒரு கால்நடை மருந்தகத்துக்கு 5 ஆயிரம் அலகு வரை சிகிச்சை அளிக்க முடியும். அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையின் படி அப்பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைய வேண்டும் என்பது அரசு விதி.

Credit : News18

கால்நடை வளர்ப்போரின் வேண்டுகோள்!

கால்நடை மருந்தகத்தில் பயன்பாடு பரப்பளவு என்பது நகராட்சிக்கு உட்பட்ட வன்னியர்பேட்டை, செங்குந்தர்பேட்டை, ஆனந்த நகர், கடப்பேரி, மோச்சேரி, மாம்பாக்கம், காந்திநகர் ஆகிய பகுதிகளை கொண்டதாக உள்ளது. இப்பகுதிகளில் தொழில் ரீதியாக வளர்க்கப்படும் கறவை மாடுகள் (Dairy Cows), ஆடுகள், கோழிகள், செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை தற்போது 5000 அலகை கடந்து, 7000 அலகுகள் உள்ளதாக கால்நடை துறையினர் (Department of Animal Husbandry) கூறுகின்றனர்.
தற்போது, மதுராந்தகம் நகராட்சியில் 7000 அலகுகள் அளவில் விலங்கினங்கள் (Animals) உள்ளன. இதனால், இங்குள்ள கால்நடை மருந்தகத்தை, கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டால் கால்நடைகளுக்கான எக்ஸ்ரே (X-Ray), ஸ்கேன் (Scan) ஆகிய வசதிகளோடு, அதற்கான மருத்துவ அலுவலர்களும் நியமிக்கப்படுவார்கள்.

சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு:

மருத்துவமனை வந்துவிட்டால், கால்நடைகளை இரவு நேரங்களிலும், மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க முடியும். கூடுதலாக கால்நடைகளுக்கான மருந்துகள், ஊட்டச்சத்து (Nutrition) பொருட்கள் இருப்பு வைக்கப்படும்.
தற்போது, கால்நடைகளுக்கான அறுவை சிகிச்சை (surgery) போன்ற தேவைகளுக்காக சென்னை வேப்பேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய நிலை உள்ளது. மதுராந்கத்தில், கால்நடை மருத்துவமனை (Veterinary Hospital) அமைந்தால், இங்கேயே அறுவை சிகிச்சை அளிக்க முடியும். எனவே, தினமும் அதிகளவில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மதுராந்தகம் மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் (Social activists) வலியுறுத்துகின்றனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

விதைகளைப் பாதுகாக்கும் வசம்பு எண்ணெய்! தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு!

சுயதொழிலில் திருநங்கைகள் ஆர்வம்! பசுமாடு வளர்த்து பால் வியாபாரம்!

English Summary: Madurantakam should upgrade the veterinary dispensary as a veterinary hospital! Cattle breeders demand!
Published on: 18 October 2020, 02:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now