News

Sunday, 14 August 2022 02:52 PM , by: Poonguzhali R

Kite Festiva

மாமல்லபுரப் பகுதிக்கு அருகில் உள்ள கிழக்குக் கடற்கரை சாலையில் சர்வதேசப் பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. இது சுற்றுலாத் துறைக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் கடலோரப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

சர்வதேசப் பட்டம் விடும் திருவிழா ஆகஸ்ட் 13,14,15 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறுகின்றன. இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று சுமார் 8 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். இவ்விழாவைத் தமிழக அமைச்சர்களான மதி வேந்தன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இவ்விழாவில் கலந்துகொண்டு வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்க, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து 80க்கும் மேற்பட்ட ராட்சதப் பட்டம் செய்யும் கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் கலைஞரின் வடிவமைப்பில் பறந்த கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பட்டம் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ஈர்த்துள்ளது. அதேபோல ஏலியன், கார்ட்டூன் முதலான பல வகையான பட்டங்கள் குழந்தைகளைக் கவரும் வகையில் நேற்று வானில் விடப்பட்டன.

இரவில் கலை நிகழ்ச்சிகள், இசைவிழா, பேஷன் ஷோ, உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று மாலை ராஜேஸ் வைத்யாவின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளது என்பது நினைவுக்கூறத்தக்கது.

மேலும் படிக்க

ரூ. 70 ஆயிரம் கோடியைத் தாண்டிய திருப்பூர் பின்னலாடை வர்த்தகம்!

இந்த 5 ரூபாய் இருக்கா? இந்தாங்க பிடிங்க ரூ. 2 லட்சம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)