News

Tuesday, 22 November 2022 11:21 AM , by: Poonguzhali R

Chief Minister M. K. Stalin's flexibility!

54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதோடு, இது தன் குடும்ப விழா என பேசி புதுமணத் தம்பதிகளை நெகிழப் பேசியுள்ளார். இது குறித்த விரிவான தகவலைப் இப்பதிவு வழங்குகிறது.

சென்னை கோபாலபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 54 மாற்றுத்திறனாளி இணைகளுக்குத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின், பரிசுகளை கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வில் எம்.பி. கனிமொழியும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது : “உங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் என பெயர் சூட்டி கண்ணியத்தைக் கொடுத்தவர் கலைஞர்தான். அந்த வகையில் நமக்குப் பெயர் சூட்டிய தந்தை கலைஞர்தான், அதனால் இது குடும்ப விழா எனவும் பேசியுள்ளார்.

கலைஞர் தலைமையில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்தபோது மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வகையான பயன்பாட்டுக் கருவிகள், 36 மாதிரிகளில் 7219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. நகரப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவரோடு கட்டணமில்லாமல் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 2021-2022 நிதியாண்டில் 813 கோடியே 65 லட்சம் ரூபாயும், 2022 - 2023 நிதியாண்டில் 838 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் அவர்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை விரிவாக எடுத்துரைப்பதாகக் கூறியுள்ளார்.

இவை அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் என நினைத்துவிட வேண்டாம் எனவும், இவற்றைத் தரவேண்டியது என்னுடைய கடமை. மாற்றுத்திறனாளிகளின் மற்ற கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றித்தர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் படிக்க

1000 ரூபாய்க்கு ரூ.21 ஆயிரம் ரியல்மீ ஸ்மார்ட்போன் ஆஃபர்

இலவச ரேஷன் புதிய அப்டேட்! வெளியானது மகிழ்ச்சி செய்தி!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)