News

Sunday, 04 April 2021 01:05 PM , by: Elavarse Sivakumar

Credit : Tamil Webdunia

திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் 43 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

காற்றானது தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் இருந்து தமிழகப் பகுதிகளில் வீச வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது 2 முதல்3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு (Maximum temperature forecast)

04.04.21 வரை

  • அதேநேரத்தில் திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கரூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலையானது, இயல்பைவிட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரக்கூடும்.

  • இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். எனவே பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர், வாக்காளர்கள், போக்குவரத்துக் காவலர்கள் ஆகியோர், முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது, ஊர்வலம் செல்வது போன்றவற்றைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • ஏனைய வட கடலோர மாவட்டங்களில்2 முதல் 4 டிகரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்.

05.04.21 மற்றும் 06.04.21

  • சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கோவையில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

  • இதன் காரணமாக, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்தவெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • ஏனையக் கடலோர மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளது.

வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)

04.04.21 முதல் 05.04.21

வடதமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 38டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)

மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தென்னையில் வேரூட்டம் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்!

உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!

தமிழகத்தில் விளையும் மஞ்சள் இரகங்கள் என்னென்ன?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)