News

Thursday, 18 May 2023 04:37 PM , by: Poonguzhali R

Mettur Dam in Tamil Nadu will be opened on June 12!

மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டு இருப்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

இந்த மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதோடு, கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையில் நீர் இருப்பு வசதி உள்ளதால், ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், அணையின் திறப்பு இன்னும் சில நாட்களுக்கு முன்னே வரலாம் என்று தமிழக நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே 16 அன்று, அணையின் நீர் இருப்பு சுமார் 70 ஆயிரம் மில்லியன் கன அடி இருந்தது. முந்தைய ஆண்டின் இதே நாளுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை 6 மில்லியன் கன அடி குறைவாக உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தீபகற்பப் பகுதியில் பல பகுதிகளில் இயல்பைவிட அதிகமான மழை பெய்யும் என்று கணித்திருப்பதால், மேட்டூர் அணை திறப்பு இன்னும் சில நாட்களுக்கு முன்னே வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுவாத் தென்மேற்கு பருவமழை ஜூன்-செப்டம்பர் மாதங்களில் தீவிரமாக இருக்கும், இதனால் இப்பகுதியின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

கடந்த 3 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு போதிய அளவு தண்ணீர் அளித்து வரும் நிலையில், மேட்டூர் அணையைச் சில நாட்களுக்கு முன்பே திறந்து விடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க

தாமிரபரணியில் குவியும் பிளாஸ்டிக்! அகற்றும் NHAI!

தென்னந் தோப்பில் ஊடுபயிர் செய்ய சிறந்த பயிர்கள் என்னென்ன?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)