நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 March, 2023 4:14 PM IST
MK Stalin has ordered the free electricity supplied to the powerloom weavers to 1000 units

திமுக தனது தேர்தல் வாக்குறுதிக்களை நிறைவேற்றும் வகையில் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நூல் விலை உட்பட இதர உப பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் விசைத்தறி மற்றும் கைத்தறி உரிமையாளர்கள் சமீப காலமாக பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். தமிழகத்தின் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பி தான் பலரின் வாழ்வாதாரம் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட் வழங்கப்பட்டு வந்தது. சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு முன்பே இலவச மின்சரம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அறிவிப்பு தாமதமாகியது. சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் தற்போது விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு 1000 யூனிட்டாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவை:

திமுக தனது தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில்  முதலமைச்சர் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 200 யூனிட் இலவச மின்சாரத்தை, 300 யூனிட்டாக உயர்த்தி, 01.3.2023 முதல் வழங்க உத்திரவிட்டுள்ளார்கள். இதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் ரூபாய் 8.41 கோடி நிதியை அரசு மானியமாக மின்சாரத்துறைக்கு வழங்கும் என தெரிவித்துள்ளார்.

இதைப்போல், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை, 01.03.2023 முதல், 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்திரவிட்டுள்ளார்கள். மேலும், 1000 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, யூனிட் ஒன்றுக்கு வெறும் 70 பைசா அளவே உயர்த்தி அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவினமான ரூபாய் 53.62 கோடி நிதியை சேர்த்து மொத்தம் 484.52 கோடி ரூபாயை மின்சாரத்துறைக்கு மானியமாக அரசு வழங்கும் என குறிப்பிட்டுள்ளார். முதல்வர் அறிவிப்பினை தொடர்ந்து விசைத்தறி, கைவினைகள், ஜவுளித்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் அரசாணை வெளியிட்டுள்ளார்.

சமீப காலமாக நூல் விலை உட்பட இதர உப பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் பாதிப்படைந்த விசைத்தறி நெசவாளர்கள் முதல்வரின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் காண்க :

பூமி இன்னும் சூடாகுமோ? கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் 2022-ல் புதிய உச்சம்

சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிர்வாகம் தவறிவிட்டது- ஜி20 மாநாட்டில் மோடி உரை

English Summary: MK Stalin has ordered the free electricity supplied to the powerloom weavers to 1000 units
Published on: 04 March 2023, 04:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now