News

Tuesday, 19 April 2022 11:52 AM , by: Ravi Raj

National Garlic Day on April 19'2022..

1800 களின் பிற்பகுதி வரை சமையல்காரர்கள் பூண்டின் மதிப்பை தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது, பூண்டு இந்திய உணவு பழக்கத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாகும்.

இன்று (ஏப்ரல் 19, 2022) தேசிய பூண்டு தினம், மாலை 4:00 மணிக்கு "நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியத்தின் கருத்து: பூண்டு தீர்வு" என்ற தலைப்பில் கிரிஷி ஜாக்ரன் ஒரு சிறப்பு விர்ச்சுவல் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. பூண்டு அதன் சமையல் மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. 7000 ஆண்டுகளுக்கு முன் ஆசியாவில் பூண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்றில், சமையலில் பூண்டின் மனத்திற்கு சிறப்பு இடம் உண்டு. 

பூண்டு அதன் சுவை மற்றும் நறுமணத்தைத் தவிர, உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், நச்சுத்தன்மை மற்றும் எடை இழப்பு போன்ற நன்மைகளை வழங்குவதற்கும் மிகவும் பயனுள்ள உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பூண்டு இரத்த ஓட்டம் மற்றும் ஜீரணத்திற்கு உதவுகிறது, அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

இந்த நன்மைகளைத் தவிர, பூண்டில் குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு உள்ளது, இது எடை இழப்புக்கு உதவுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, பூண்டில் வைட்டமின்கள், தாதுக்கள், வைரஸ் தடுப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கலவைகள் அதிகம் உள்ளன. இந்த நோயெதிர்ப்பு அமைப்பு நமது உடலின் பாதுகாப்பை அதிகரிக்கிறது மற்றும் ஜலதோஷம் மற்றும் இருமல், அத்துடன் கொரோனா உள்ளிட்ட பல்வேறு பருவகால தொற்றுகளுக்கு எதிரான போராட்டத்தில் உதவுகிறது. 

பூண்டு இந்தியாவில் ஒரு பிரபலமான குமிழ் பயிராகும். இது பெரும்பாலும் ஒரு மசாலா அல்லது மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பூண்டு விளைகிறது, ஆனால் குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முக்கிய பகுதிகளாகும்.

மேலும் இதற்கான, பொருத்தமான மண் மற்றும் வகை காரணமாக, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பூண்டு உற்பத்தி அதிகம் செய்யப்படுகிறது. சில பூண்டு வகைகள் அனைத்து வானிலை நிலைகளிலும் வளரக்கூடியவையாகும், அதனால்தான் இந்தியா புதிய மற்றும் குளிர்ந்த பூண்டு, உலர்ந்த பூண்டு, நீரிழப்பு பூண்டு செதில்கள், நீரிழப்பு பூண்டு தூள் மற்றும் பூண்டு எண்ணெய் ஆகியவற்றை பஹ்ரைன், பங்களாதேஷ், ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இந்த நிகழ்வில் இடம் பெற உள்ள புகழ்பெற்ற பேச்சாளர்கள்:

  • சதீஷ் சிங் பாய்ஸ், முற்போக்கு விவசாயி, பிலோடா சதக், மத்தியப் பிரதேசம்.
  • டாக்டர். பி கே பந்த், தலைமை இயக்க அதிகாரி, க்ரிஷி ஜாக்ரன்.
  • டாக்டர் நரேந்திர சிங், முன்னாள் தலைவர், IARI, காய்கறி அறிவியல், புது தில்லி.
  • டாக்டர். பி கே துபே, துணை இயக்குநர் (வளர்ப்பவர்), தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை, கர்னால், ஹரியானா.
  • டாக்டர். பிப்வே பூஷன் ரத்னாகர், விஞ்ஞானி, வேளாண்மை கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைப் பொறியியல், ICAR- வெங்காயம் மற்றும் பூண்டு ஆராய்ச்சி இயக்குநரகம், புனே, மகாராஷ்டிரா.
  • டாக்டர். சந்திர பிரகாஷ் பச்சௌரி, முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர், KVK, நீமுச், மத்தியப் பிரதேசம்.
  • சேத்தன் பரத்வாஜ், பூண்டு சப்ளையர் உரிமையாளர், குல்லு, இமாச்சல பிரதேசம்.
  • அரவிந்த் படிதார், முற்போக்கு விவசாயி, தம்னியா நீமுச், மத்தியப் பிரதேசம்.

மேலும் படிக்க:

‘உலக தண்ணீர் தினம் 2022’ மார்ச் 22 அன்று க்ரிஷி ஜாக்ரனில் வெபினார் ஏற்பாடு செய்கிறது!

கிரிஷி ஜாக்ரனின் 'வேளாண் கண்காட்சித் தொழில் கோவிட் -19 க்குப் பிறகு எப்படி உயரும்' என்ற தலைப்பில் இணைய கருத்தரங்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)