நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 November, 2022 5:13 PM IST
New project of Rs.17.63 crore

சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் ரூ. 17.63 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.

அரசின் பயனானது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உறுதியாக கிடைக்க வேண்டும் என்றும் முதல்வர் பேசியுள்ளார். அரசின் கவனம் மிகுதியாக தேவைப்படுவோரில் குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை காக்கவும் அவர்கள் சமுதாயத்தில் சமநிலையில், சுயமரியாதையுடன் வாழும் நிலையினை உறுதி செய்யவும் 2011-ம் ஆண்டில் தலைவர் கலைஞரால் இது தனித்துறையாக உருவாக்கப்பட்டது என்பதை நினைவு கூறிய அவர்,

மாவட்ட அளவில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கு சரியான முறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய, உயர்மட்டக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.

அதோடு, 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடைய அரசாணை வெளியிடப்பட்டுள்ளதையும் எடுத்து விளக்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் வழங்கும் திட்டம் உலக வங்கி நிதியுடன் ஆயிரத்து 763 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட உள்ளன. அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சி ஆகியன அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத்துறைகளின் மூலம் தொழில்திறன் பயிற்சியும் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்துக்கு விருது அறிவிப்பு!

English Summary: New project of Rs.17.63 crore - Chief Minister M.K.Stalin's announcement!
Published on: 24 November 2022, 05:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now