News

Tuesday, 21 March 2023 09:14 AM , by: R. Balakrishnan

New Ratin Card

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட தலை நகரிலேயே புதிய ரேஷன் கார்டு அச்சிடும் வசதி செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புதிய ரேஷன் கார்டு (New Ration Card)

தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அரிசி மற்றும் மளிகை பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கார்டு இல்லாதோர்கள் புதிய ரேஷன் கார்டை பெற முயற்சித்து வருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலின் போது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு புதிய ரேஷன் கார்டுக்கு பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் அந்தந்த மாவட்ட தலைநகரிலேயே புதிய ரேஷன் கார்டை அச்சிடும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் இடைவெளியில் மாவட்ட நிர்வாக ஒப்புதலுடன் புதிய கார்டுகளை அச்சிட்டு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையா இருக்கலாம்- பட்ஜெட் உரையில் சிரிப்பை ஏற்படுத்திய வேளாண் அமைச்சர்

உழவர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா? தொடங்கியது வேளாண் பட்ஜெட் தாக்கல்

இது குறித்து பேசிய குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் 4 மாதம் நிலுவையில் உள்ள ரேஷன் கார்டு விண்ணப்பங்களை பரிசீலித்து புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க

நீதி கேட்டு தஞ்சாவூர் விவசாயிகள் நெடும் பயணம்: டெல்லியில் போராட்டம்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை மையம் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)