மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 April, 2021 6:29 PM IST

தமிழ்நாட்டில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல் (Curfew enforcement)

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும்,  இரவு நேர ஊரடங்கும் இன்று நள்ளிரவு முதல்  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

ஆம்னி பேருந்துகள் (Omni Buses)

இரவில் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு விரைவுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றை இயக்கமுடியாத சூழல் உருவானது.

இந்நிலையில் பகல் பொழுதில் தொலைதூர ஊர்களுக்குப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகமும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் முடிவெடுத்திருந்தன. இதனால் இன்று காலை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

செயற்குழு கூட்டம் (Executive Committee Meeting)

சென்னையிலிருந்து நாள் ஒன்றுக்கு 400 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இன்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது.

அவசர ஆலோசனை (Emergency consultation)

அதில் ஆம்னி பேருந்துகளைப் பகலில் இயக்க முடியாது என்றும் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது.

இயக்கப்பட மாட்டாது

இதனால் நாளை முதல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் திருப்பி செலுத்தப்படும் (Amount Refund)

ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளுக்குக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த திடீர் அறிவிப்பு பொது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

20 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்தப் போகிறது!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- நாளை முதல் அமல்!

English Summary: Omni buses will not run in Tamil Nadu from tomorrow! Shock to the public!
Published on: 20 April 2021, 06:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now