நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 June, 2023 5:06 PM IST
Opening of schools in Tamil Nadu! Special buses decided to operate!!

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இருக்கின்றன. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் வெளியூர் சென்று திரும்ப ஆரம்பிக்கும் நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாமல் இருக்கும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதனை முன்னிட்டுச் சிறப்பு பேருந்துகள் இயக்கப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதோடு, வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு-க்கு 1300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2200 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதேபோல், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கு எனக் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தாமிரபரணி ஆறு: திருநெல்வேலியில் கழிவுநீர் சேகரிப்பு திட்டம்!

மேட்டூர் அணை நீர் திறப்பு! விவசாயிகள் விளைச்சலில் மும்முரம்!!

English Summary: Opening of schools in Tamil Nadu! Special buses decided to operate!!
Published on: 02 June 2023, 05:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now