பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 23 March, 2023 6:19 PM IST
Opportunity for youth to start new e-service centers! Apply today!

அரசின் சேவைகள் அனைத்தையும் வழங்குவதற்கு என அரசின் பொது சேவை மையங்களை (CSC) தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) செயல்படுத்தி வருகின்றது. இச்சேவை மையங்களை தொடங்க விண்ணப்பங்கள் அரசின் சார்பாக வரவேற்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) வேலையில்லாத கல்வியறிவு பெற்ற இளைஞர்கள், தொழில்முனைவோர், இ-சேவை மையங்கள் அல்லது பொதுவான சேவை மையங்களைத் தொடங்க விண்ணப்பங்களை வழங்குமாறு அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து ஆட்சியர் வி.பி. ஜெயசீலன் குறிப்பிடுகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராம அளவிலான தொழில்முனைவோர் உள்ளிட்ட பிற முகமைகள் மூலம் தங்களின் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து அரசின் சேவைகளை வழங்குவதற்காக பொது சேவை மையங்களை (CSC) தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) செயல்படுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.

இத்தகைய இ-சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், சிறந்த சேவைகளை வழங்குவதற்காக அனைத்துக் குடிமக்களும் புதிய பொது சேவை மையங்களைத் திறக்கவும், அதனை அனுமதிக்கவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை திட்டமிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். அதோடு, பொது சேவை மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு வரிசையில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

புதிய பொது சேவை மையங்களை தொடங்க ஆர்வமுள்ளவர்கள் http://www.tnesevai.tn.gov.in மற்றும் www.tnega.tn.gov.in ஆகிய இரு இணையதளங்களில் ஏப்ரல் 14 அன்று இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் போன் மற்றும் இ-மெயில் ஐடி ஆகியவை மூலம் விண்ணப்பதாரருக்குப் பயனாளர் அடையாளம் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞர்களும், தொழில் முனைவோர்களும் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

மேலும் படிக்க

50% மானியத்தில் விவசாய உபகரணங்கள்: விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு!

விவசாயிகளே மகிழ்ச்சி செய்தி!! நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.450 கோடி!

English Summary: Opportunity for youth to start new e-service centers! Apply today!
Published on: 23 March 2023, 02:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now