மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 October, 2021 1:37 PM IST
Organic Clothes

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி (Deepavali) சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி. அருகில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.

ஆர்கானிக் துணி

கோ-ஆப்டெக்ஸில் குழந்தைகளுக்கு ரசாயனம் கலக்காத புதிய ரக ஆர்கானிக் துணி (Organic Dress) வகைகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை இன்று (அக்டோபர் 22) தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி கூறும்போது, "தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2 மாதத்துக்குள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை ரூ.1.25 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. வரும் 4 மாதங்களில் ரூ.5 கோடிக்கு மேல் விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ரசாயனம் கலக்காத புதிய துணி வகைகளை முதல்வர் ஸ்டாலின் நாளை (அக். 23) தொடங்கி வைக்க உள்ளார். நாங்கள் மானியக் கோரிக்கையில் தெரிவித்த திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.

அதேபோல், கோ-ஆப்டெக்ஸில் கிடைக்கும் பட்டு, மற்ற இடங்களில் கிடைக்கும் பட்டுத் துணி வகைகளைக் காட்டிலும் தரம் அதிகம். பட்டின் தரத்தை உறுதிப்படுத்தும் கியாரன்டி அடையாள அட்டையை முதல்வர் நாளை அறிமுகம் செய்துவைக்க உள்ளார். அதில், பட்டில் உள்ள தங்கம், வெள்ளி ஜரிகைகளின் சதவீதம் குறிப்பிடப்பட்டிருக்கும்" எனத் தெரிவித்தார்.

கோ-ஆப்டெக்ஸ் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சித்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.7.67 கோடி விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனை இலக்கு ரூ.20 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு விற்பனை நிலையத்துக்கு ரூ.40 லட்சம், அரக்கோணத்துக்கு ரூ.75 லட்சம், சோளிங்கருக்கு ரூ.4 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

வெப்பநிலை மாற்றத்தால் இந்தியாவில் பாதிப்பு: ஆய்வில் தகவல்!

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா அபார சாதனை!

English Summary: Organic Clothes for Kids!
Published on: 23 October 2021, 11:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now