மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 March, 2021 6:21 PM IST
Daily Thandhi

ஈரோடு மாவட்டத்தில், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை (Palm Jaggery) ஏலமும், சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் ஏலமும் நடைபெற்றது. நாட்டு சர்க்கரை ஏலம், விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் நாட்டு சர்க்கரையை 1,698 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நாட்டு சர்க்கரை ஏலம்:

ஏலத்தில் 60 கிலோ மூட்டை நாட்டு சர்க்கரை, குறைந்தபட்ச விலையாக (Minimum price) ரூ.2 ஆயிரத்து 220-க்கும், அதிபட்ச விலையாக (Maximum price) ரூ.2 ஆயிரத்து 280-க்கும் விற்பனை ஆனது. விற்பனைக்கு வந்த அனைத்து நாட்டு சர்க்கரை மூட்டைகளும், மொத்தம் ரூ.37 லட்சத்து 97 ஆயிரத்து 355-க்கு ஏலம் போனது.

பூக்கள் ஏலம்:

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் பூ மார்க்கெட் நடைபெற்றது. நேற்று நடந்த மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4½ டன் பூக்களை (Flowers) விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (Jasmine) கிலோ ஒன்று ரூ.301-க்கும், முல்லை ரூ.320-க்கும், காக்கடா ரூ.140-க்கும், செண்டுமல்லி ரூ.20-க்கும், பட்டுப்பூ ரூ.61-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.325-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.140-க்கும் ஏலம் போனது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

காலையில் முருங்கை இலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்!

வேளாண்மை சார்ந்த தொழில்கள் பற்றி அறிவோம்!

English Summary: Palm Jaggery and flowers sales for auction in Erode
Published on: 26 March 2021, 06:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now