மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 July, 2021 11:56 AM IST

தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 5ம் தேதி காலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கு ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று ஜூலை 5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகள் கூடிய செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அரசு மற்றும் தனியார் கண்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படும். சரியான அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் இதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அரங்குகளில் கண்காட்சி விற்பனைக் கூடங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அல்லது இரண்டு தவணைகள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியம்.

உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள ஹோட்டல்களில் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை காற்றோட்ட வசதியுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50 சதவீத நுகர்வோர் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

தேநீர் கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத பேர் மட்டும் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர்.

கேளிக்கை விடுதிகளில் ஜிம், விளையாட்டுக்கள் மற்றும் உணவகங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழிநுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் பணியாற்ற அனுமதிக்கப்படும்.

தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் செய்லபட அனுமதிக்கப்படும். அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் 50 சதவீத நுகர்வோர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்து மாவட்டத்திலும் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க வேண்டும்.

மது கடைகள் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்பட அனுமதி உள்ளது.

அனைத்து வழிபாட்டு தலங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம். திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதிக்கவில்லை.

அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் சரியான காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் குறைந்த வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதியுண்டு.

மேலும் படிக்க:

தமிழகத்தில் பொதுவான தளர்வுகள் இன்று முதல் அமல்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடு நீங்கியது!

ஜூலை 31-ந் தேதிக்கு பிறகு கல்லுரிகளில் மாணவர் சேர்க்கை

மாதத்திற்கு இரு முறை உருமாறும் கொரோனா!

English Summary: Permission for bus service in Tamil Nadu after 6 weeks
Published on: 05 July 2021, 11:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now