மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 June, 2021 4:12 PM IST

அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக, உலகம் முழுவதிலும் உள்ள வல்லுநர்கள் கச்சா எண்ணெய் விலை $100 வரை அதிகரிக்கும் நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சாமானிய மக்களை பாதிக்கிறது என்பதை மறுக்க இயலாது. தற்போது, ​​நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கு உள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 98.88 ரூபாய் என்ற விலையிலும், டீசல் விலை லிட்டருக்கு 92.89 ரூபாய் என்ற விலையிலும் விற்கப்படுகிறது. இந்நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில், உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள், கச்சா எண்ணெய் விலை $100 வரை அதிகரிக்கும் என்று கருதுகின்றனர்.

OPEC+ நாடுகளின் கூட்டம் மீது உலக கவனம்

கச்சா எண்ணெய் கடந்த ஒரு வருடத்தில் பீப்பாய் விலை $ 26 வரை உயர்ந்தது. 2020 ஜூன் மாதம், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 40 டாலர் என்ற விலையில் கிடைத்தது, இன்று  கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 76 டாலருக்கும் அதிகமாக வர்த்தகம் செய்யப் படுகிறது. உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை  உள்ளது. இப்போது அனைவரின் கவனமும் ஜூலை 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஒபெக் + நாடுகளின் கூட்டத்தில் இருக்கிறது. மேலும்,உற்பத்தி கொள்கை தொடர்பான முடிவு ஆகஸ்டில் எடுக்கப்படும். கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் ரஷ்யா ஆதரவளிக்கிறது.

பெட்ரோல் விலை ரூ.125 ஐ தாண்டும்

ஒபெக் + நாடுகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்கும் முடிவை எடுத்தால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படுமா அதிகரிக்கப்படுமா என்பது  குறித்து எண்ணெய் நிபுணர் அரவிந்த் மிஸ்ரா, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவதற்கு முன்னரே, எண்ணெய் கொள்முதலில், வருவாய் ஏதும் இல்லாத நிலை தான் இருக்கிறது. கச்சா எண்ணெய் விலைகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல் விலை ரூ.125 வரை செல்ல வாய்ப்பு உண்டு. குறைவதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் 100 டாலர் வரை செல்லலாம்

கச்சா எண்ணெய் விலை ஜூன் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் விலை 76 டாலரை எட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் கச்சா விலை பீப்பாய்க்கு 100 டாலரை எட்டும் என்று பாங்க் ஆப் அமெரிக்கா கணித்துள்ளது. மற்றொரு  பெட்ரோல் ஏஜென்சியான கோல்ட்மேன் சாச்ஸ், கச்சா எண்ணெய் விலை  இந்த ஆண்டின் இறுதியில் பீப்பாய்க்கு 80 டாலர்  என்ற அளவை எட்டலாம் தெரிவித்தது.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒப்பந்தம்

ஈரான் மீதான அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் கச்சா எண்ணெய் விளையும் அதிகரித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால், அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை நீக்க  கூடும். ஈரான் எண்ணெய் விநியோகத்தை அமேம்படுத்தினால், விலை சிறிது குறையலாம்.  ஆனால் இரு நாடுகளின் அறிக்கைகளும்  வித்யாசமாக உள்ளன. எனவே, எண்ணெய் சப்ளை உடனடியாக அதிகரிக்குமா என்பது இன்னும் தெளிவாக இல்லை.

மேலும் படிக்க:

சதம் அடித்த பெட்ரோல் விலை-கொடைக்கானலில் ரூ.102க்கு விற்பனை!

தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100க்கு அருகே

ஓராண்டில் இருமடங்காக உயர்ந்த சமையல் எண்ணெய் விலை

English Summary: Petrol price to go up to ₹ 125:experts says.
Published on: 25 June 2021, 01:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now