மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 June, 2021 7:36 AM IST
Credit : Dinamalar

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரிவுபடுத்தும் முயற்சிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஈடுபட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) வலியுறுத்தி உள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்

கொரோனா வைரஸ் தடுப்பூசியை (Corona Virus Vaccine) மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இதை ஆய்வு செய்ய, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்த உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் குறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் விபரங்கள் அவரிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் மாவட்டத்திற்குள் - மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து

Credit : Dinamalar

தடுப்பூசி விவரம்

கடந்த ஆறு நாட்களில் மக்களுக்கு, 3.77 கோடி தடுப்பூசி 'டோஸ்'கள் (Dose) செலுத்தப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை, மலேஷியா, சவுதி அரேபியா மற்றும் கனடாவின் மக்கள் தொகையை விட அதிகம். நாட்டில் உள்ள, 128 மாவட்டங்களில், 45 வயதுக்கு மேற்பட்டோரில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 16 மாவட்டங்களில், இதே வயதில், 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

தன்னார்வ தொண்டு நிறுவனம்

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரிவுபடுத்தும் முயற்சிகளில், என்.ஜி.ஓ., (NGO) எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், இதர அமைப்புகளும் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை, பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மேலும் படிக்க

கருப்பு பூஞ்சை நோயை சமாளிக்க தமிழகத்தில் மருத்துவ குழு தயார்!

ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!

English Summary: PM urges to expand vaccination drive
Published on: 27 June 2021, 07:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now