அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 January, 2023 3:33 PM IST
Pongal Festival: Development of earthen pot production!

பொங்கல் பண்டிகையை ஒட்டி திண்டுக்கலில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையினைக் கிராமங்கள் தொடங்கி நகா்புறம் வரை வெகு விமரிசையாக அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கமாக இருக்கிறது. தமிழா்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் (தை மாதம்) மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பண்டிகையில் அரிசி, வெல்லம், நெய் சேர்த்து பானையிலிட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து விமா்சியைாக கொண்டாடுவது தமிழா்களின் மரபாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டியில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி அதிகமாக நடைபெற்று வருகின்றது.

மண்ணிலிருந்து பதப்படுத்தி பானை தயாரித்து வண்ணம் தீட்டி விற்பனைக்காகவும் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் கரூர், தேனி, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கும், கேரளா முதலான வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைப்பது வழக்கம். இது மண்பாண்டம் செய்பவர்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.

வருடம் முழுவதும் பானை தயாரிப்பாளர்கள் மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டாலும் பொங்கல் பண்டிகை, கார்த்திகை திருநாள் போன்ற சமயங்களில்தான் ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. தற்பொழுது உள்ள நாட்களில் மிகவும் தீவிரமாக உழைத்து மண் பாண்டகளைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க

ரூ.1550 கோடி: தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கிய அரசு!

Diabetics: சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை உண்ணலாம்! பட்டியல் இதோ!

English Summary: Pongal Festival: Development of earthen pot production!
Published on: 09 January 2023, 03:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now