மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 November, 2022 10:03 PM IST
Pongal Prize 2023

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கப் பரிசுடன், மளிகை பொருட்கள் மஞ்சள் பைகளில் வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

பொங்கல் பரிசு (Pongal Gift)

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பல்வேறு வகையான மளிகை பொருட்கள் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வர இருக்கும் பொங்கல் பண்டிகைக்கான பொங்கல் பரிசு குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இருப்பதுடன், எடை குறைவாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு வகையான புகார்கள் வந்தடைந்தன. அதனால் இந்த முறை மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கமாக பணம் வழங்க உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த ரொக்க பரிசு தொகையுடன் தற்போது, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் 100 ml அல்லது 500 ml ஆவின் நெய் வழங்கப்பட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பு மஞ்சள் பையில் வழங்கியது போல் இந்த முறையும் அவ்வாறே வழங்கப்படலாம். ஏனெனில் இதன் மூலமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியும். இதையடுத்து தற்போது பொங்கலுக்கு 1 மாத காலமே இருப்பதால் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

வீட்டில் இருந்தே ரூ. 1 லட்சம் சம்பாதிக்க வாய்ப்பு: மத்திய அரசின் சூப்பரான போட்டி!

ரேஷன் கடைகளில் வருமானத்தை உயர்த்த வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்!

English Summary: Pongal Prize 2023: Tamil Nadu Government's New Plan!
Published on: 28 November 2022, 10:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now