சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 8 December, 2022 3:02 PM IST
Pongal Gift 1000 rs
Pongal Gift 1000 rs

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு, ரேஷனில் அரிசிபெறும் கார்டுதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குகிறது. பச்சரிசி, சர்க்கரை, நெய், முத்திரி, கரும்பு உள்பட பொங்கல் பொருட்களுடன், ரொக்கமும் வழங்கப்படுவது வழக்கம். தற்போது, மாவட்டம் தோறும், ரேஷன் கார்டு தாரர் வங்கி கணக்கு இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பொங்கல் பரிசு (Pongal Gift)

ரேஷன் கடை வாரியாக, வங்கி கணக்கு இல்லாதோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விற்பனையாளர்களை கொண்டு, இணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் நெருங்கும் நிலையில், இந்தாண்டு பரிசு தொகை, வங்கி கணக்கில் செலுத்தப்படும் என, மக்கள் மத்தியில் தகவல்கள் பரவியுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 79 ஆயிரம் கார்டு தாரர், கணக்கு இல்லாதோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களிடம் மட்டும் வங்கி கணக்கு விவரம் பெறப்பட்டு இணைக்கப்பட்டு வருகிறது; கணக்கு இல்லாதோருக்கு, மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய கணக்கு துவங்கப்படுகிறது. இதையடுத்து, அனைத்து கார்டுதாரர்களும், வங்கி கணக்கு விவரங்களுடன், ரேஷன்கடைகளை அணுகத்துவங்கி விட்டனர்.

இது, விற்பனையாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது. கிராமப்புறங்களில் வசிப்போர் பணம் எடுக்க சிரமப்படுவர் என்பதால், இந்தாண்டு மட்டும், பொங்கல் பரிசு தொகையை, வழங்கம்போல் ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன.

ஆனால், அரசு தரப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து இன்னும் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம்பெற உள்ளன என இன்னும் தெரியவில்லை. குறிப்பாக, பரிசு தொகை வங்கி கணக்கில் சேர்க்கப்படுமா அல்லது ரொக்கமாக கையில் வழங்கப்படுமா என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

பொங்கல் பரிசு ரூ.1000 ரேசன் கடையில் தான் கொடுக்கப் போறாங்க: ஆலோசிக்கும் அரசு!

UPI இல் தவறாக பணம் அனுப்பினால் இனி கவலையே இல்லை: இதைச் செய்தால் போதும்!

English Summary: Pongal Prize Money: Bank or Ration Shop?
Published on: 08 December 2022, 03:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now