மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 June, 2021 11:34 AM IST
Credit : Tamil News

சமையல் எண்ணெய்களின் விலை குறையத் தொடங்கி உள்ளதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக நிறைய சமையல் எண்ணெய்களின் விலை வரலாறு காணாத அளவு கடுமையாக உயர்ந்துள்ளது.இந்நிலையில் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் தரவுகளின் படி, கடந்த ஒரு மாத காலமாக சமையல் எண்ணெய்களின் விலைகள் குறைந்து வருகின்றன. மும்பை மாநகரத்தின் விலைகளை பார்க்கும் போது, சிலவற்றின் விலைகள் சுமார் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவருகிறது.

குறையும் எண்ணெய்களின் விலை

  • 2021 மே 7 அன்று ஒரு கிலோ ரூ 142 ஆக இருந்த பாமாயிலின் விலை தற்போது ரூ 115 ஆக 19 சதவீதம் குறைந்துள்ளது.

  • 2021 மே 5 அன்று ஒரு கிலோ ரூ 188 ஆக இருந்த சூரியகாந்தி எண்ணெயின் விலை தற்போது ரூ 157 ஆக 16 சதவீதம் குறைந்துள்ளது.

  • 2021 மே 20 அன்று ஒரு கிலோ ரூ 162 ஆக இருந்த சோயா எண்ணெயின் விலை தற்போது ரூ 138 ஆக 15 சதவீதம் குறைந்துள்ளது.

  • 2021 மே 16 அன்று ஒரு கிலோ ரூ 175 ஆக இருந்த கடுகு எண்ணெயின் விலை தற்போது ரூ 157 ஆக சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளது.

  • 2021 மே 14 அன்று ஒரு கிலோ ரூ 190 ஆக இருந்த கடலை எண்ணெயின் விலை தற்போது ரூ 174 ஆக 8 சதவீதம் குறைந்துள்ளது.

  • 2021 மே 2 அன்று ஒரு கிலோ ரூ 154 ஆக இருந்த வனஸ்பதியின் விலை தற்போது ரூ 141 ஆக 8 சதவீதம் குறைந்துள்ளது.

சர்வதேச விலைகள், உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு சிக்கலான விஷயங்களை சமையல் எண்ணெய் விலைகள் சார்ந்துள்ளன. உள்நாட்டு நுகர்வு மற்றும் உற்பத்திக்கு இடையேயான இடைவெளி அதிகமாக இருந்த காரணத்தால், குறிப்பிட்ட அளவு சமையல் எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யவேண்டி இருந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

இதன் மூலம் சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.....

புவிசார் குறியீடு பெற்ற ஜல்காவோன் வாழைப்பழம் துபாய்க்கு ஏற்றுமதி!!

தென்னையில் அதிக மகசூல் பெற, எப்போது எவ்வளவு உரம் இட வேண்டும்?

பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்!

English Summary: Prices of Edible Oils begin to decline and bring relief to consumers
Published on: 17 June 2021, 11:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now