Prime Minister Narendra Modi will inaugurate the IDF WDS 2022 on September 12
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா இன்று புது தில்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப்பில் IDF உலக பால் உற்பத்தி உச்சி மாநாடு 2022 க்கு முன்னதாக செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
NDDB தலைவர் மீனேஷ் ஷா மற்றும் IDF தலைவர் பியர்கிறிஸ்டியானோ பிரசாலே ஆகியோர் கிரேட்டர் நொய்டாவில் செப்டம்பர் 12 முதல் 15 வரை நடைபெறும் உலகின் மிகப்பெரிய பால் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சரிடம் விளக்கினர். இன்று நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டிற்கான தயாரிப்புகளை சரிபார்க்க ரூபலா நிகழ்வு தளத்திற்குச் சென்றார்.
செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளில், அமைச்சர் ரூபாலா, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை இணைச் செயலாளர் சாமுவேல் பிரவீன் குமார், சர்வதேச பால் பண்ணை சம்மேளனத்தின் இயக்குநர் ஜெனரல் கரோலின் எமண்ட் ஆகியோர் முக்கியப் பேச்சாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.

IDF WDS 2022 ஐ மோடி திறந்து வைக்கிறார்:
வரவிருக்கும் உச்சி மாநாடு குறித்து ரூபாலா பேசுகையில், “48 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உச்சிமாநாட்டை நடத்துவது இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும். இந்த நிகழ்வை முக்கியமான ஒன்றாக கருதுகிறோம், மேலும் 50க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்பதையும், 15000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது பால் தொழில் மற்றும் உச்சிமாநாட்டிற்கான எங்கள் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்தியா தற்போது உலகின் 20% பயிர்களை உற்பத்தி செய்கிறது, இந்த உச்சிமாநாடு இந்தியாவில் நடப்பது ஒரு பெரிய தற்செயல் நிகழ்வு என்றே சொல்லவேண்டும். உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் பேச்சாளர்களை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.
மேலும் படிக்க:
PMKSY: நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.14.64 கோடி நிதி ஒதுக்கீடு! உடனே விண்ணப்பியுங்கள்
தமிழகம்: அடுத்த 3 நாட்களுக்கு, இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!